திங்கள், அக்டோபர் 27, 2008

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

உறவுகளே, என் உணர்வுகளே

உங்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

பல்வேறு அலுவல்களிடையே, மனிதனை அவ்வப்போது ஆசுவாசபடுத்துவது இதுபோன்ற கொண்டாட்டங்கள்தான். அதற்கென் நன்றி அவைகளுக்கு.

குடும்பத்தோடுறவாட காரணங்கள் தேவையாகிபோன இக்காலகட்டத்தில், இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய இத்தீபாவளி பண்டிகைக்காரணங்களை மதியிற்கொள்வது தேவைதானா என்ற விணாக்களுகிடையில், தீபாவளி இனிப்பு-காரங்களோடு நான் கற்ற காரணங்களையும் பகிர்ந்தாய்கிறேன்...


  1. இந்தியப்பெரும்பண்மை கூறுவது கிருஷ்ணர் நரகாசூரன் என்ற அசுரர் இனத்தவரை கொன்று, வெற்றிவாகை சூடி, மக்களை காப்பாற்றிய நன்நாள். மக்க்ள் கொண்டாடிய அந்நாள்தான் தீபாவளி (அஃது, தீவாளி)
  2. தமிழ்கூறும் நல்லுலகில், அது தீபம்+ஒளி என்று பிரித்து பொருள்படப்பட வேண்டுமென்றாகிறது. வருமையில் (இருளில்) மூழ்கியிருந்து, இக்கார்காலதின் தொடக்க மழையால் விவசாயம் (ஒளி) ஆரம்பமாகும் இக்காலகட்டத்தை குறிப்பால் தீபஒளியேற்றி கொண்டாடப்படுதால் இது தீபவொளி திருநாள் என்றழைக்கப்பட்டு, பின்பு திரிந்து, தீபாவளியாகிப்போனது என்கிறதது.

இதில் தமிழ்கூறும் தீபவொளி காரணம் நமக்கு ஏற்றுக்கொள்ளதாகும்பொழுது, நரகாசூர காரணத்தை நான் ஆராய்ந்திட விளைந்தேன்...

  1. அசுரனனோ கிருக்கனோ, ஒருவன் இறந்த நாளையா நாம் இவ்விமர்சையா கொண்டாட வேண்டும் என்ற கேள்வி நம்மைநெஞ்சை நிறுத்தத்தான் செய்கிறது.
  2. இந்துமதம் குறுங்/நெடுங் கதைகளாளும், ஒப்பனை உருவங்களாளும் சாதாரன மூளைக்கும் எட்டும்படி நன்நெறிகளை விளக்குவதாக விவேகானந்தர் தன் அமெரிக்க உரையில் விவரித்துள்ளார். அதன்படியினும், கெட்டவைகளை/இருளை அழித்து நல்லவைக்கும்/வெளிச்சத்திற்கும் கொணர்ந்தார் கிருஷ்ணர் என விளக்கினாலும், இதை தீமை ஒழிந்தநாள் என்று எதிர்முறையில் கூறுவதைவிட, நன்மை பிறந்தநாள் என்று உடன்பாட்டுமுறையில் கூறின் பெருமைகூடுமென்பது நம் கூற்று. நம் நெஞ்சும் குறுகுறுக்காது.
  3. தீபாவளி தமிழினபெருநாளல்ல அது ஆரியப்பெருநாள், ஆரிய அடிவருடிகளால் அது தமிழினதிற்குள்ளும் புகுத்தப்பட்டதெனவும், நரகாசூர அசுரர்/இராக்கதர் வகையென தமிழினத்தைதான் ஆரியர்கள் குறிப்பிட்டதாகவும், அதற்கு தமிழினத்தை அவரில் ஒருபுரத்தார் "இராக்கதர்" என்றழைத்த அச்சொல்லே சாட்சி எனவும் பாரதிதாசன் வெகுண்டெழுந்துள்ளார்.

வரலாறு எப்படியிருபினும், மக்கள் விரும்பி கொண்டாடும் இம்மாநாளை நாம் வரவேற்கிறேம்...இதனால் நிகழும் பொருளாதார நகர்வுகளை நாம் விரும்புகிறேம்...

வரலாறு கோளாராயினும்,

வம்பில்லாதவரை வரவேற்போம் வாழ்நாள்வரை,

வந்தவரை வாழவைப்போம் வம்பு இல்லாததுவரை.




இக்கரணங்களோடும், என்னசல்களோடும் மானசீகமான வாழ்த்துகளை, குடும்பத்தோடு நீர்கொண்டாடும் உம் தீபாவளிக்கு சமர்ப்பிக்கிறேன்.


மீண்டும், என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
--
சாவண்ணா மகேந்திரன்.

புதன், அக்டோபர் 22, 2008

வஞ்சிக்கப்படும் வல்லினம்

வாழ்வாங்கு வாழ்ந்த, வல்லமை பொருந்திய நம் தமிழினம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது சொந்தங்களே.


  1. இந்தியா-பாகிஸ்தான் போர்களில், இந்தியமக்களை பாதுகாக்க, இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் பேரில், இலங்கை பாகிஸ்தானின் போர் விமானங்களுக்கு உதவாமலிருக்க, இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட 5 லட்சத்திற்கும் மேலான தமிழர்களின் இன்றை நிலையை எவரறிவார். எங்த நாதியும் இல்லாமல் இந்தியாவந்த அந்த தியாக செம்மல்கள் எங்கு செத்துமடிந்தார்களோ?
  2. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; நம்பி இனைந்த நமை, காரியம் (சுதந்திரம்) முடிந்ததும், வரையபட்ட இந்தியாவெனும் வட்டத்திற்குள் வாழ "இந்தி" கற்க கட்டாயபடுத்தி, மறுத்து போராடிய மானமுள்ள தமிழர்களில் 100-க்கும் மேற்பட்டோரை இந்திய இரனுவத்தின் துப்பக்கிகளுக்கு இறையாக்கியதே அன்றை வஞ்சகதனமான இந்திய அரசு. எவன் செய்வான் இந்த இழிந்தகாரியத்தை? இதையொத்த சுயலாப தந்திரங்களை விழிப்புடன் தடுப்பது நம் பிறப்புரிமை, சமுதாயகடமை. நானும் என் சொந்தங்களும் ஒப்பற்ற என் தாய்மொழியில் உருகமுடியும் பொழுது மாற்றான் தாய்மொழி என்ன மயித்துக்குவே? தேவையுள்ளவன் தேடிக்குவான், திணிக்க எந்த "கோ"மகனுக்கும் உரிமையில்லைவே.
  3. பேருக்குதான் இந்தியன், எந்த பிரச்சினைக்கும் அண்டை மாநிலத்தில் அடிவாங்கி, அவமானபட்டு, கற்பிழந்து கஞ்சி குடிக்கவைத்திருக்கும் இந்த ஈன இந்தியா நமக்கென்ன செய்தது. குறைந்தபட்சம், நதிநீரையாவது முறையாக்க முனைந்ததா? வரிபனத்தாலும், அந்நிய வருவாயாலும் நம்மை உறிஞ்சி வடக்கை வாழ்வைக்குதே தவிற, நம் சொந்தங்கள் இன்னும் நாக்குவழித்துகொண்டுதானே இருக்கிறார்கள். அவலட்சனம் இப்படி கூத்தாட, இந்தி படித்தால் வேலைகிடைக்குமென நயவஞ்சகதனம்வேறு. ஆம், சிப்பந்திகளாகவும், சில்லரைகளாகவும் வடக்கன் கால்துடைக்கும் வேலை நமக்கு நிச்சயம்.
  4. ஆண்டாண்டு காலமாய் தமிழன் ஆளுமையிலிருந்த கச்சத்தீவை, தன் பேடிதனத்தால் (மற்றொரு இந்தியா-பாக்கிஸ்தான் போர், மீண்டும் இலங்கை-பாக்கிஸ்தான் உறவு, மற்றொரு இந்திய--இலங்கை ஒப்பந்தம்) இலங்கையிடம் இழந்த இந்தியா, மீண்டும் மீண்டும் இலங்கை இராணுவத்தால் கச்சத்தீவில் சுட்டுக்கொள்ளப்படும் மீன்வர்களின் உயிர்களை மதிக்கிறதா? மாறாக அந்நாட்டின் பாதுகாப்பிற்கென போர்கருவிகளையும், உக்திகளையும் வழ்ங்கி உற்சாகப்பபடுத்துகிறது. இதுபற்றி மத்திய அரசிடம் நாம் கெஞ்சவேண்டியிருக்கிறது. இதுவரை 320-க்கும் மேற்பட்ட தமிழர்களை (மீனவர்களை) இலங்கை இராணுவம் கொன்றுகுவித்திருக்கிறது. சீரிபாய வேண்டிய இந்திய ஏவுகனைகள் வீரியமற்றுபோய்விட்டிருக்கிறது போன்ற தோற்றம் நமக்கு. 320 தமிழன் உயிர் போனபின்பும், சகலத்தையும் பொத்திக்கொண்டிருக்கிற இந்தியா, ஆப்பிரிக்க கடல்கொள்ளையர்களால் கடத்தப்ட்ட ஒரு இந்தியனை மீட்க போர்க்கப்பலை அனுப்பியுள்ளது, ஏன், அவன் வட்க்கத்தியன் என்பதாலா? இதுவரை போன 320 தமிழனின் உயிர்களுக்கும்/குடும்பத்திற்கும், மீதமுள்ள ஆயிரகணக்கான மீன்வர்கள், அவர்தம் குடும்பத்திற்கு இந்த வீரியமற்ற இந்தியாவின் பதில் என்ன?
நன்பர்களே, பிறநாட்டு தமிழின இன்னல்களை கலையவேண்டாம், உள்நாட்டு தமிழன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வதைக்கப்படுகிறான், வடக்கன் பொருப்பிலுள்ள இனவாத இந்திய அரசுகள் இந்திய தமிழனை உதாசீனபடுத்தி வஞ்சிக்கிறது.
  1. இங்கிலாந்தில் அவமானப்பட்ட வடக்கத்திய நடிகையின் கண்ணீரை துடைக்க நீண்ட இந்திய வெளிவுரவுத்துறையின் கைகள், இரத்தம் வழியும் தமிழக மீனவனுக்காக நீளாதது ஏன்?
  2. ஆப்பிரிக்க குஜராத்தியற்கு நீண்ட இந்திய வெளிவுரவுத்துறையின் கைகள், தமிழீழ மற்றும் மலேசிய தமிழனுக்கும் நீளாதது ஏன்?




வல்லினமே விழி, உடைவாளாய் உறங்காதே,
தூக்கம் கலை, துக்கம் துற,
இனஉணர்வு கொள், இனவெறி கொல்,
ஒதுங்கி இருந்தது போதும்,
தமிழின உணர்வாளனாய் மாறு,
தாய்தமிழ் போற்று, தமிழினம் காத்திடு,
ஓங்கி உரை, காலத்தை எட்டிப்பார்,
எதிர்கால தமிழனமும் செழிக்கட்டும் - அது,
வரலாற்றில் உன்பெயரை செதுக்கட்டும்.



"நல்லதோர் வீனைசெய்து, அதை நலங்கெட புழுதியிலெறிவதுண்டோ?" - மகாகவி பாரதி.

--
சாவண்ணா மகேந்திரன்.