வெள்ளி, மார்ச் 26, 2010

மகனே வா... மறுபிறப்பே வா...

மகனே வா,
மறுபிறப்பே வா,
இயற்கை  எனக்களித்த
இன்னுமொரு வாய்ப்பே வா,
எழியவன் என்வழி வந்த
வலியவனே வா,
இனப்பெருமை ஏற்ற வந்த,
இன்னுமொரு  புலியே வா,
இடிதாங்கினும் இனம்காக்க
மடிதங்கியவனே வா,
எம்பேர் சொல்லவந்த
எம்பெருமானே வா,
எளியவன் நான் பிந்தும்
எல்லைகள் வெல்பவனே வா,
பெத்தவன் நானேந்தும்
பேராயுதமே வா,

எங்கப்பனிட்ட கட்டளைகள்
உங்கப்பனிடுகிறேன் கேள்,
மகனே கேள்,
மனிதராய் பிறந்தவர் பலர்,
மகானாய் இறந்தவர் சிலர்,
என் மகனாய் சென்று வா,
என் மகான் சிலர் வென்று வா....

அகிம்சையால் வென்ற காந்தியை,
அறிவியலில் வென்ற அயின்ஷ்டீனை,
ஆன்மிகம் வென்ற விவேகனை,
ஆசைகள் கொன்ற புத்தனை,
இலக்கியம் படைத்த கம்பனை,
இமயம் தொட்ட வரம்பனை,
ஈகையில் வென்ற தீரசிபியை,
ஈழத்தில் நின்ற வீரப்புலியை,
உண்மையை பேசிய சந்திரனை,
உரிமையை பேசிய சாகிப்பை,
ஊருக்கு உழைத்த  காமராசனை,
ஊமைக்கு  உரைத்த  ஈவேராவை,
எவனையும் கெஞ்சாத அம்மானை,
எமனையும் அஞ்சாத பொம்மனை,
ஏழையாய் வலம்வந்த கக்கனை,
ஏகாதிபத்யம் எதிர்த்த காரலை,
ஐயமற உரைத்த ஒளவையை,
ஐதீகம் உடைத்த லிங்கனை,
ஒளிகொண்ட புலவன் பாரதியை,
ஒப்பற்ற உரையாளன் அண்ணாவை,
ஒதிச்சென்ற அய்யன் வள்ளுவனை,
ஒளவை படைத்த ஆத்திச்சுடியை,
வென்றுவா.

இவரில் எவரேனும் வென்றுவா,
இல்லை இவர்பலரை தின்றுவா
என்தவம் தான்செய்தான்  இத்தந்தை 
எனும் இன்பமதை தா.

இந்நெறி நீ நன்செய்தால்.. 
இருக்கும்போதே எம்பேர் சாகும்,
இல்லாதபோதும் உம்பேர் வாழும்...


--
சாவண்ணா மகேந்திரன்