திங்கள், டிசம்பர் 13, 2010

அடுத்து என்ன செய்ய ....?

வீரம் மட்டுமல்ல விவேகமும் பேசுங்கள் உறவுகளே ...

நாம் கத்தியை தீட்ட தீட்ட எதிரி புத்தியை தீட்டுகிறான்,
தன் சக்தியை கூட்டுகிறான்..
அவன்  தன் உக்தியை மாற்றுகிறான் ...

கவனிக்க...
ஆம்,  கருவி உருவுவோம், கருவி உருவுவோம்
மக்கள் நலன் கருதி உருவுவோம்..

ஓங்கி அடிப்போம் எதிரி தலையில்
சம்மட்டியாலும், சமபுத்தியாலும் ...!

நம்செயலில் நிசமிருப்பதுபோல்
நியாயம் இருக்க செய்வோம் ...

ஆகையால்,
நிர்வாணமாக்கப்பட்ட நமக்கு தேவை நிதானம் ...
நிர்மூலமாக்கப்பட்ட நாக்கு தேவை நிதி மூலம் ...
வன்னிமண்ணில் நமக்கு தேவை தமிழ் வாண்டுகள்..
புத்தம் புதிய புலிக்குபிறக்கும் பூண்டுகள்..
இருபதாண்டுகளில் தேவை இரண்டு லட்சம் வேங்கைகள்..
வழிநடத்த, வணிகம் செய்ய, வரைமுறை படைக்க..

பெறுவோம் தெருவெங்கும் பிள்ளைகள் பத்து...
தேடுவோம் உலகெங்கும் அவைகளுக்கு சொத்து..
தருவோம் அவைகளுக்கு உணர்வும் ஊக்கமும்...

அடுத்து..
நாம் முடுக்க வேண்டியது ஈழத்தில் மூலதனம்...
நம் முடக்க வேண்டியது காடையரின் மூளைத்தனம்..
பத்தாண்டுகளில் பாதி வணிகம் ஈழத்தமிழன் தமிழன் கையில்...
பாதி  இலங்கை சொத்து உலகத்தமிழன் தமிழன் பையில்..
முடியாத வேங்கைகளை வளர்த்த வெளிநாடுவாழ் தமிழனுக்கு..?

அறுபது ஆண்டுகளில் கிட்டாத சுதந்திரம்,
இருபது ஆண்டுகளில் கிட்டும்,
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..

திங்கள், டிசம்பர் 06, 2010

மழைத்தவளையாய்....கவிதைகள் பாகம் 3

நீதி மனு:
ஆறாம் வகுப்பில் அதிசயித்து,
ஏழாம் வகுப்பில் எட்டிபிடித்து,
எட்டாம் வகுப்பில் கூட்டாளியாகி,
ஒன்பதாம் வகுப்பில்  ஒன்றாய்படித்து,
பத்தாம் வகுப்பிலும் என்னை முந்திவிட்ட,
என் பால்ய வகுப்பறை தோழன்,
பழகியதொழில் செய்து பிழைக்கிறான்,
பட்டப்படிப்பிற்கு பணமில்லை என்பதாலும்,
பாட்டன்பெயர் பார்த்தசாரதி என்பதாலும்.

சந்தனச் சாணி:
வலியவன் கூட்டம் வாரியள்ளி பூசியது
சந்தனமும் சவ்வாதுமாய்,
எளியவன் நானுமள்ளி பூசினேன்
நாறியது நாய்விட்டையாய் சாதி ...

காந்தியும் கருவியும் ...

எம்மினம்காக்க ஏந்துவேன் எக்கருவியும்
காந்தி சொன்னார்
சிலை வைத்தார்கள்,

அவ்வினம் காக்க அவர் பேரன்
கத்தி  சொன்னான்
சிறை வைத்தார்கள் ...


வேங்கைகளும் ஆடுகளும் ...

கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியான்கிட்ட 
மணிக்கணக்கா  மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள்  வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை
வேங்கைகளின் சுரணையும் சுதந்திரமும்  ...!