வியாழன், டிசம்பர் 07, 2023

ஆகையால் நாதக நாகாக்கக் கடவ.


அழுகி அவிழ்தலால் அழிகிறது அரசியல் புரட்சி, ஆகையால் நாதக நாகாக்கக் கடவ. 


கானச்சகிக்காத காக்கையின் கர்ச்சனையில் வன்குஞ்சாகும் பொன்குஞ்சை, வரம்புமீறும் வாய் கதைப்பை, வலிய வழியும் வக்கனையை இடித்துரைக்கும் கடிதம், இது நான் நிறப்பி அனுப்பும் படிவம்.

ஓர் அடிப்படை அரசியல் மாற்றடத்தின் கூவலும் கொக்கரிப்பும் ஒரே சித்தத்தில் இருத்தல் நன்று, ஒரே சத்தத்தில் இருத்தல் நன்றன்று. அடிவயிற்று வெப்பத்தை அடுத்தவரின் முகம் நோக்கிக் கக்கக்கூடாது, அதை அவர் அடிவயிற்றிற்கும் கடத்த வேண்டும்.  

ஆகையால், மானங்காக்க வந்தவனே, மேடைகளிலிருந்து மக்களை நோக்கிப் பாடு, தமிழர் மறைசுமந்து ஆடு, எச்சில் வந்தால் விழுங்கிவிடு, எதிர்ப் பதத்தின் முகமும் தமிழ் முகமே, இன மானம் காக்கும் இனம் உன் மொழி இனமே. ஆகையால் வாய் பேசு அண்ணாபோல், வாள் வீசு அண்ணன்போல்.

உயிர் மயிருக்குச் சமம் எனும் எண்ணம் விடு, உனக்கும் உதவாமல் செத்துப்போவாய்,  உன் ஒவ்வொரு மயிரும் ஒரு உயிருக்குச் சமம் என்று திண்ணம் நடு, உலகிற்கே உதவி செத்தும்வாழ்வாய். 

மயிர் நீப்பின் உயிர் வாழாத மான்பு கொண்டது உன் மானுடக்கதை, அதை மனதில் ஏற்றி மயிர் காக்கவேண்டும் உன் தமிழ்ச் சதை. 

வீரம் வாய்ச்சொல் இல்லை, வினைச்சொல். பாம்பின் கால் பாம்பறியும், பன்பின் வாள் பன்பறியும். ஆகையால் வீரம் பேசாதே, விவரம் பேசு! எரிந்து கத்தாதே, எதிர்த்துக்  கொத்து! 


மண் அழுத்த வெப்பத்தைத் தாங்காமல் எரிந்த பொருள் நிலக்கரியாகும், கனமான மான வெப்பத்தையும்  தாங்கி செரித்த பொருள் நிலவைரம் ஆகும். நீ என்னவாகப் போகிறாய் மண்ணின் மைந்தனே, மந்திரியாகவா? மானம் பாத்திரம்.
 
அனைவருக்கும் பொதுவான அரசியலில் ஆளுயரம் வளர்ந்த உனக்கு ஆட்சி அதிகார அரசியல் கதை சொல்ல அவரென்ன இவரென்ன எவரென்ன, அனைத்திற்குமான மக்களாட்சியில் தினம் வாழ்வில்  முக்கி முட்டையிடும் நீ என்ன உணருகிறாய்,  நீ என்ன சொல்கிறாய், நீ என்ன கொய்கிறாய் என்பதே அரசியல் மாற்றம். 

ஊசிப்போன உண்மைகளை,  ஊதிப் பெரிதாக்கி, ஊமையர்முன் உரக்கப்பேசி, உரிமையாக உள்நாக்கில் உல்லாசம் ஊறி, சுய உச்சம் அடைவது அல்ல அரசியல், ஊர் உள்ளே நீ நடந்து, உலக எல்லை நீ கடந்து, உடல் உதிரம் நீ வழிந்து, ஓர் ஊர்நன்மை கொணர்வது அரசியல்.

ஆகையால்,  அரசியல் சித்து விளையாட்டில் சிற்றின்பச்சந்திரனாக காயாதே, பேரின்பச்சூரியனாகக் காய். சொந்த சரக்கில் எரிவது சூரியன், பிறர் தந்த சரக்கில் ஒளிர்வது சந்திரன். 

ஊரின் உரிமை காக்க ஓடித்தேடி வந்தவனே, நீ ஒளிகொண்ட புலவனின் ஒன்றுவிட்ட வாரிசு, ஆகையால் உளியை எடுத்து ஒலியைக் கூட்டு, உன் ஒளியைக் காட்டு.  

மகுடம் வரினும், மலை வரினும், மற்றவன்போல் மனம் மாறி விடாதே. அரசியலுக்காக அறிவை இழக்காதே.

வாழ்த்துகளும் வாஞ்சைகளும்.
மஜெசா 


புதன், ஆகஸ்ட் 17, 2022

வரலாற்றுத் துயரங்கள் : சீம ரசினி கொண்ட ராம ராச்சியம்

வரலாற்றுத் துயரங்கள் : சீம ரசினி கொண்ட ராம ராச்சியம் 

என் அகத்திற்கும் புறத்திற்கும் உறவான தமிழர்களே, வணக்கம். 

நடந்த கடந்தவார அரசியல் கதைகளை கட்சிகள் பேதமின்றி நானாகிய நாம் எழுதும் இன்னுமொரு வரலாற்றுத்துயரம்.

கலைஞருக்கு ஒரு #பேனா மட்டுமல்ல ஓராயிரம் பேனா கொடுத்தாலும் தகும், அதை அடுத்தவருக்கு பங்கம் இன்றி எங்கு வைத்தாலும் நலமே. இயற்கையின் பொருட்டு இதை எதிர்ப்பவர்களின் கருத்திற்கு இன்னுங்கூடிய மரியாதையை கொடுத்து, தக்க தவிர்ப்பாடுகள் செய்து, அழகிய பேனாக்களை ஆங்காங்கே வைக்க அரசு ஆவன செய்யவேண்டும். 

பொறுப்புணர்வோடு வெறுப்புணர்வு கலந்து வெகுண்டு எழும் தமிழ்த்தேசிய தமிழர்களே, அறிவிலேற்பீர், தான் கொண்ட கொள்கையை தமிழ் எழுத்துக்களால் ஏட்டிலும் நாட்டிலும் சாதித்த ஒருவனுக்கு அடையாளமாக தமிழர்கள் பேனாவை கொடுத்தார்கள் என்பது ஞாயம் மட்டுமல்ல அதுவே அறிவுங்கூட. கலைஞரின் சட்டைப்பையிலிருந்து பேனாவை எடுத்தெழுதி சொருகிவிட்ட @சீமான் பேனாவை வரவேற்று வாழ்த்து சொல்லுவது அரசியல்க் கடமை, வாய்ப்பில்லை என்பது மடமை.

மீண்டும் சீண்டும் அரசியல் பேசும் அசளூருக்கார திரு திரு அவர்களே, நினைவில் கொள்க, தமிழர் நாடு, அறமும் மறமும் திறமும் அணிதிரண்ட அறிவியல்க்காடு. ஆன்மீக அரசியல் என்று ஆசைகாட்டும் அரிதார அழகர்களே, அதிகார அசடுகளே, அநியாயம் செய்யாமல் அப்பாலே போங்களேன் அவார்களின் அடிமைகளே. தமிழர்களின் மீது அன்புகாட்டுவதாக ஆசைகாட்டும் அடிப்படைவாதிகளே, யாரப்பா நீவு, எங்களுக்கு இரக்கங்காட்ட, நாங்கள்  இட்டதில் அடுப்பெரிக்கும் நீங்கள் எங்களுக்கு கருணைகாட்டுவதா? வந்தாரை வாழவைப்பதும், விருந்தோம்பலும் தமிழர்களுக்கு பிடித்தமானது என்பதால், இங்கே தட்டில் எதையும் விதைக்கலாம் என்று நினைத்துவிட்டீர்களா, பொட்டில் எதையும் ஏற்கும் கடவுளின் காவலர்களே? ஏனிந்த உண்டவீட்டிற்கு இரண்டகம் செய்யும் இழிபழி, தமிழர்களுக்கு எதேனும் செய்யவேண்டும் என்றால் அரசாங்க்கத்தை ஏமாற்றாமல் வரிக்கட்டுங்கள், அரசு அனுப்பிய சட்டங்களை அடுத்த நிலைக்கு அனுப்பி வையுங்கள், அதுதான் தமிழர்களுக்கான உங்கள் கடமை, மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள், தமிழ் மக்களாகிய நாங்கள் அறிவியல்வாதிகள், ஆகையால் அப்பாலே போங்கள்.

1) அரசியல் என்பது அனைத்துயிரிக்குமான உரிமை, அதை அவையவை பேசலாம், செய்யலாம், பரப்பலாம், ஆனால் அது பொது நன்மைக்கானது, தனிமனித நன்மைக்கானது அல்ல. 2) அரசியலால் அமைக்கப்பட்ட ஒரு ஆட்சியின் கீழ் இயங்கும் அரசும் அதன் அதிகாரமும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. 3) அரசியல் என்பது மக்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமை-ஒற்றுமைகளுக்கான கருத்துக்களின் அடிப்படையிலான அறமான ஆபத்தில்லாப்போட்டி வைப்பது. 4) அரசு என்பது மக்களுக்கான நன்மைகளை அன்றைய அறிவியலின்படி செய்து வைப்பது, அன்றைய அரசியலின்படி தள்ளி வைப்பது அல்ல. 5) சட்டம், கோட்டை, அரசு, அதிகாரம், அலுவலகம், அதிகாரிகள் போன்றோர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது அவரவருக்கான அரசியல் கருத்துகளின் அடிப்படையில், அவரவர் அரசு அதிகாரத்தை செலுத்திவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கையான தடுப்பே ஆகும்.

இரு அசளூரு ஆன்மீக சனாதன சங்கிகளின் தமிழர்களின்மீதான பரிவுகொண்ட அரசியல் சந்திப்பை, அரசியல், அரசு, அதிகாரம் இதுஇதுவென முழுமையான புரிதல் இருந்தும்,  தமிழர்களின் மீது ஊற்றப்படும் விளக்கெண்ணையை, மானமும் வீரமும் கொண்ட #நாம்தமிழர்கட்சி விவேகமாக "அரசியல் பேசுவது அனைவரின் உரிமை என ஆதரிப்பது" அனாவசியமானது, ஆபத்தானது. ஆகையால், இங்கே, பேசிய அரசியல் விவரம் கேட்பதே நுனிய விவேகம், அதை வினாவி வெடிக்கும் எதிர்க்கேள்வி கேட்பதே புரட்சி அரசியல். 

பெரியாரின் சிலையை உடைக்க வந்த சிரிப்புச் சண்டை நடிகரே, பார்த்தாலே தீட்டு என பக்குவம் செய்துவைத்த மதத்தின் அரசியலில் மலிந்துவிட்ட மானத்தமிழரே, மனமிருக்கா ஓய் உமக்கு? நீவிர் எழுந்துவிடக்கூடாது என சதி செய்த சாதிய இழிவுகளைக் கொண்டஒரு மதத்தின் எழுச்சிக்கு அறியாமல் தெரியாமல் புரியாமல், அம்மதத்தின் ஒரங்களில் உரங்கிக்கொண்டிருக்கும் உன்னை எழுப்பும் பெரியாரின் சிலையை, எழுந்து வந்து எட்டி உதைக்கிறீரே, நீ விர் எந்த வாதி? கடவுள் என்று ஒன்று இல்லை என்பது நிகழ்கால மானுட அறிவு, அதை அடுத்தவருக்கும் சொல்லி வைப்பது மானுடக் கடமை, அதை அன்று பெரியார் செய்தார், அம்மானுடக் கடமையை இன்றும் அவர் சிலை தொடர்கிறது, நீயும் செய், உன் மானுடக் கடமையை. அறிக, பெரியார் சிலையும் தொடுபவன் தலையும் ஒரே தன்மை பெரும்.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன்  முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்கியவன் காட்டுமிராண்டி, கடவுளை மற, மனிதனை நினை!

மக்களை நினைக்காமல், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாய் உருவிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் அடிவருடிகளாக ஊருக்கு உழைக்கும் உரிமைத் தமிழர்களே, உங்களுக்கு எப்படிச் சொன்னால் எகிரும் என்று தெரியவில்லை. ஒரு கல் தொலைவில் மக்களுடன் தொடர்பிலிருக்கும் ஒரு மாநில அரசிடமிருக்கும் மக்கள் நலவள அதிகாரங்களை ஓராயிரம் கல் தாண்டி இருக்கும் ஓர் ஒன்றியத் தூர அரசு பிடுங்கிக்கொண்டால், அங்கே உட்கார வரும் ஒழுங்கற்ற ஒரு ஊதியக்காரர் அதை ஒருவேலை தவறாகப் பயண்படுத்தினால், ஒற்றைப்புள்ளித் தோல்வி வந்தால் ஒன்றியமே நாசமாகும் மனகன நிலை வரும் என்ற இயற்பியல் தத்துவத்தை என்ன செயவது? அதிகாரக் குவியல் ஆபத்து என்பது உங்கள் அறிவியலில் இல்லையா, அடங்கி வாழச்சொல்லும் ஒரு அரசியல் நாட்டிற்கு கோடா? மின்சார வினியோகத்தையும் விற்கத்துடிக்கும் விற்பனையாளர்களே, பொது வீதியையும் விற்று விட்டு, பிறகு காலார நடக்க எங்கே போவீர்கள், கல்லரைக்கா? அரசுகளும் அதிகாரமும் புதிய புதிய வளர்ச்சிகளை கட்டியமைக்க, இருக்கும் கோவணத்தையும் வித்துப் பறக்க அல்ல. ஆகையால், நல்ல புத்தி கண்டு போவீர்.

தவிர, தாய் நாட்டில் பொழிந்த மழைகள், பதறிய அணைகள், கழண்ட மதகுகள்,  ஓடிவந்த வெள்ளம், கரைபுரண்ட காவேறி, தரைபுரண்ட தமிழர் சதுரங்கம், ஒளி ஒலித்த ஒப்பில்லாத் தமிழர் வரலாறு, சிக்கி முக்கி சிரிக்க வைத்த திருக்குறள், எல்லாம் இனித்தன, என்னையும் பணித்தன.

மும்மாரி பொழிய,

முழுநிலமும் செழிக்க,

வாழ்த்துகளும்,

வாஞ்சைகளும்.

--

சாவண்ணா மகேந்திரன்.