திங்கள், டிசம்பர் 06, 2010

மழைத்தவளையாய்....கவிதைகள் பாகம் 3

நீதி மனு:
ஆறாம் வகுப்பில் அதிசயித்து,
ஏழாம் வகுப்பில் எட்டிபிடித்து,
எட்டாம் வகுப்பில் கூட்டாளியாகி,
ஒன்பதாம் வகுப்பில்  ஒன்றாய்படித்து,
பத்தாம் வகுப்பிலும் என்னை முந்திவிட்ட,
என் பால்ய வகுப்பறை தோழன்,
பழகியதொழில் செய்து பிழைக்கிறான்,
பட்டப்படிப்பிற்கு பணமில்லை என்பதாலும்,
பாட்டன்பெயர் பார்த்தசாரதி என்பதாலும்.

சந்தனச் சாணி:
வலியவன் கூட்டம் வாரியள்ளி பூசியது
சந்தனமும் சவ்வாதுமாய்,
எளியவன் நானுமள்ளி பூசினேன்
நாறியது நாய்விட்டையாய் சாதி ...

காந்தியும் கருவியும் ...

எம்மினம்காக்க ஏந்துவேன் எக்கருவியும்
காந்தி சொன்னார்
சிலை வைத்தார்கள்,

அவ்வினம் காக்க அவர் பேரன்
கத்தி  சொன்னான்
சிறை வைத்தார்கள் ...


வேங்கைகளும் ஆடுகளும் ...

கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியான்கிட்ட 
மணிக்கணக்கா  மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள்  வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை
வேங்கைகளின் சுரணையும் சுதந்திரமும்  ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.