புதன், ஏப்ரல் 22, 2009

மழைத்தவளையாய்....2

தீவிரவாதம்
~~~~~~~~
பசித்த குழந்தை
பால்வராத முலைகடித்ததா
தீவிரவாதம்?




பார்வை போதும்
~~~~~~~~~~~~
கண்கள் மட்டும் சந்தித்துவிட்டால்
கழுதைக்கும் மலரும் காதல்
காக்கையின் மீதும்!



நிழலின் அருமை
~~~~~~~~~~~~
கடன் வாங்கி
கப்பம் கட்டி
டியூசன் வைத்து
உறவின்முன் பேசவைத்து
வெள்ளைமொழி கேட்டு மகிழ்ந்தார் அப்பா.

வாத்தியார் தேடிச்சென்று
வரிசையில் தெருவில் நின்று
விடுமுறையில் நடைமுறை கண்டு
விருந்தின்முன் பேசச்சொல்லி
பிள்ளைத்தமிழ் கேட்டு மகிழ்கிறேன் நான்.

கலிபோர்னியா வெயிலில் தெரிகிறது
நிழலின் அருமை!



கோழைத்தனம்
~~~~~~~~~~
உரிமை கேட்டு உருமும் எமை
முடக்கும் மும்முரத்தில் மறந்துவிட்டாய்
பல்லிளிக்கும் உன் கோழைத்தனம் மறைக்க!



குறையாண்மை
~~~~~~~~~~
உரிமைகேட்டு ஊரைக்கூட்டுபவன்
கேள்வியின் பதிலுக்கு கையாலாகாமல்
இறையாண்மை பேரைச்சொல்லி சிறையிலிடுகிறது
குறையாண்மை கூட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.