அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 07, 2023

ஆகையால் நாதக நாகாக்கக் கடவ.


அழுகி அவிழ்தலால் அழிகிறது அரசியல் புரட்சி, ஆகையால் நாதக நாகாக்கக் கடவ. 


கானச்சகிக்காத காக்கையின் கர்ச்சனையில் வன்குஞ்சாகும் பொன்குஞ்சை, வரம்புமீறும் வாய் கதைப்பை, வலிய வழியும் வக்கனையை இடித்துரைக்கும் கடிதம், இது நான் நிறப்பி அனுப்பும் படிவம்.

ஓர் அடிப்படை அரசியல் மாற்றடத்தின் கூவலும் கொக்கரிப்பும் ஒரே சித்தத்தில் இருத்தல் நன்று, ஒரே சத்தத்தில் இருத்தல் நன்றன்று. அடிவயிற்று வெப்பத்தை அடுத்தவரின் முகம் நோக்கிக் கக்கக்கூடாது, அதை அவர் அடிவயிற்றிற்கும் கடத்த வேண்டும்.  

ஆகையால், மானங்காக்க வந்தவனே, மேடைகளிலிருந்து மக்களை நோக்கிப் பாடு, தமிழர் மறைசுமந்து ஆடு, எச்சில் வந்தால் விழுங்கிவிடு, எதிர்ப் பதத்தின் முகமும் தமிழ் முகமே, இன மானம் காக்கும் இனம் உன் மொழி இனமே. ஆகையால் வாய் பேசு அண்ணாபோல், வாள் வீசு அண்ணன்போல்.

உயிர் மயிருக்குச் சமம் எனும் எண்ணம் விடு, உனக்கும் உதவாமல் செத்துப்போவாய்,  உன் ஒவ்வொரு மயிரும் ஒரு உயிருக்குச் சமம் என்று திண்ணம் நடு, உலகிற்கே உதவி செத்தும்வாழ்வாய். 

மயிர் நீப்பின் உயிர் வாழாத மான்பு கொண்டது உன் மானுடக்கதை, அதை மனதில் ஏற்றி மயிர் காக்கவேண்டும் உன் தமிழ்ச் சதை. 

வீரம் வாய்ச்சொல் இல்லை, வினைச்சொல். பாம்பின் கால் பாம்பறியும், பன்பின் வாள் பன்பறியும். ஆகையால் வீரம் பேசாதே, விவரம் பேசு! எரிந்து கத்தாதே, எதிர்த்துக்  கொத்து! 


மண் அழுத்த வெப்பத்தைத் தாங்காமல் எரிந்த பொருள் நிலக்கரியாகும், கனமான மான வெப்பத்தையும்  தாங்கி செரித்த பொருள் நிலவைரம் ஆகும். நீ என்னவாகப் போகிறாய் மண்ணின் மைந்தனே, மந்திரியாகவா? மானம் பாத்திரம்.
 
அனைவருக்கும் பொதுவான அரசியலில் ஆளுயரம் வளர்ந்த உனக்கு ஆட்சி அதிகார அரசியல் கதை சொல்ல அவரென்ன இவரென்ன எவரென்ன, அனைத்திற்குமான மக்களாட்சியில் தினம் வாழ்வில்  முக்கி முட்டையிடும் நீ என்ன உணருகிறாய்,  நீ என்ன சொல்கிறாய், நீ என்ன கொய்கிறாய் என்பதே அரசியல் மாற்றம். 

ஊசிப்போன உண்மைகளை,  ஊதிப் பெரிதாக்கி, ஊமையர்முன் உரக்கப்பேசி, உரிமையாக உள்நாக்கில் உல்லாசம் ஊறி, சுய உச்சம் அடைவது அல்ல அரசியல், ஊர் உள்ளே நீ நடந்து, உலக எல்லை நீ கடந்து, உடல் உதிரம் நீ வழிந்து, ஓர் ஊர்நன்மை கொணர்வது அரசியல்.

ஆகையால்,  அரசியல் சித்து விளையாட்டில் சிற்றின்பச்சந்திரனாக காயாதே, பேரின்பச்சூரியனாகக் காய். சொந்த சரக்கில் எரிவது சூரியன், பிறர் தந்த சரக்கில் ஒளிர்வது சந்திரன். 

ஊரின் உரிமை காக்க ஓடித்தேடி வந்தவனே, நீ ஒளிகொண்ட புலவனின் ஒன்றுவிட்ட வாரிசு, ஆகையால் உளியை எடுத்து ஒலியைக் கூட்டு, உன் ஒளியைக் காட்டு.  

மகுடம் வரினும், மலை வரினும், மற்றவன்போல் மனம் மாறி விடாதே. அரசியலுக்காக அறிவை இழக்காதே.

வாழ்த்துகளும் வாஞ்சைகளும்.
மஜெசா 


ஞாயிறு, மே 08, 2011

மழைத்தவளையாய் ....பாகம் 4.

யார் தலைவன்
----------------------
யார் தலைவன்? பிரபலமாக பிழைப்பவனா,
பிறர் பலம் ஆகா உழைப்பவனா?
யார் தலைவன்? மக்கள் வெளிச்சத்தில் நிற்பவனா?
மக்களை வெளிச்சத்தில் நிறுத்துபவனா?
யார் தலைவன்? இனம் காக்க கம்பு தூக்குபவனா?
பணம் காக்க சொம்பு தூக்குபவனா?
யார் தலைவன்? ஊர்காக்க சாதித்து காட்டுபவனா ?
ஊழல்காக்க சாதியை காட்டுபவனா?
யார் தலைவன்? கோடிகோடியாய் கள்ள பணம் சேர்ப்பவனா?
தெருத்தெருவாய் நல்ல மனம் சேர்ப்பவனா.
யார் தலைவன்? புலியையும் புழுவாய் வளைப்பவனா?
புழுவையும் புலியாய் வளர்ப்பவனா?
யார் தலைவன்? கொடுமைகள் கண்டும் பொத்திக்கொண்டு இருப்பவனா?
கத்திக்கொண்டாவது இருப்பவனா?


மடையர் சாதி
--------------------
 
எங்கோ எவனோ எவனையோ வெட்ட
இங்கோ என்கழுத்திலும் கத்தி
நாம் அவனும் ஒரே சாதியென
எவனோ சொன்னதால்...

கருவறையும் கழிவறையும்
-----------------------------------------
கருவறையை கழுவுதலும்,
கழிவறையை கழுவுதலும்
பொதுமக்கள் வாழ்வை பேணும்
புனிதமான செயல் எனக்கொள்வோம்...


யார்  அல்ல, என்ன 
-----------------------------
கொள்கைகளே நாம் எதிர்ப்பது, கொண்டவர்களை அல்ல.
கருத்துக்களே நாம் விமர்சிப்பது, கருதியவரை அல்ல.
கலைகளே நாம் ரசிப்பது, கலைஞர்களை அல்ல. 
எழுத்துக்களே நாம் படிப்பது, எழுத்தாளரை அல்ல.



சுரனையும்  சுதந்திரமும் 
-------------------------------------------
கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியாதவன்கிட்ட
மணிக்கணக்கா மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள் வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை,
வேங்கைகளின் சுதந்திர வேகமும், தாகமும் ...!

எது கவிதை...
---------------------

நெடியில்லா சொல்லெடுத்து,
நேர்மையான கருத்துவைத்து,
சொற்சுவையும் பொருட்சுவையும்
சொட்ட சொட்ட தேன்போல,
செருக்கோடு கையளிக்க புலவன்
வாய்ருசித்து மெய்யுருகி
வாய்ச்சொல் ஏதுமின்றி,
மலங்கவைப்பது கவிதையா?

மடித்து மடித்து எழுதி,
மதிப்பில்லா கதைசொல்லி
மலங்கக்குவது கவிதையா,
இதுபோல்?

சனி, அக்டோபர் 16, 2010

காங்கிரஸ் ஆட்சி, காமராசர் ஆட்சி, கக்கன் ஆட்சி ...

ஒருதரம், இரண்டுதரம், மூன்றுதரம் என்று ஏலம் போடதகுறையாக காங்கிரஸ் கட்சி ஊரூராக  "தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி, காமராசர் ஆட்சி, கக்கன் ஆட்சி ..." என்று முழங்கியும் முனங்கியும் திரிந்தவண்ணம் இருக்கிறார்கள். ஓட்டுபோடும் மக்கள் ஒருவரும் பெரிதாக இதுபற்றி சிந்திப்பதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை. இருப்பினும், திடீரென்று செத்துப்போன கக்கனையும் காமராசரையும் தோண்டியெடுத்து வந்து பூஜிப்பதும், புல்லரிப்பதும் அடுத்த தேர்தளிலுள்ள அளவுகடந்த ஆசையின் காரணமாகத்தான் என்பது வெட்டவேளிச்சதில் கொட்டமடித்தாலும், தமிழக காங்கிரஸ் கங்காணிகள் வக்கணையாய் வாயிலேயே பொங்கல் கிண்டுகிறார்கள் வாக்காளனுக்கு.  இந்தமுறை எப்படியாயினும் எதைவித்தேனும் வரும் தேர்தலில் தேனும் தினைமாவும் தின்றுவிட தூண்டிவிடுகிறது காங்கிரஸ் தலைமை, எந்த திறமையும் தகுதியும் இறையாண்மையும் இல்லாத தமிழக காங்கிரஸ் கைத்தடிகள் ஆண்மைமிக்க கக்கனையும் காமராசனையும் களமிரக்குரார்கள் கையாலாகத்தனமாக.

 காமராசரை விடுங்கள், அவ்வப்போது சில மேடைகளில் சில  காங்கிரஸ் தலைவர்கள் காமராசர் பெயரை உச்சரித்ததுண்டு. ஆனால், இவர்கள் மருந்துக்கும் நினைவில்கொள்ளாதிருந்த கண்ணியவான் கக்கனை இன்று கொண்டாடுவதும் , நாம்முன் கொண்டுவருவதும் ஒரு மலிவான அரசியல் சூழ்ச்சியே. கிள்ளுக்கீரையாக தள்ளிவைக்கபட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை  உறிஞ்ச இந்த ஓநாய்கள் போட்டிருக்கும் திட்டம்.   அதிலொன்றுதான், தலித்துகளின் கூரைக்குள் தலைவர் ராகுல், சமபந்தி சாகசம் - அலங்காரம் செய்கிறது அரசியல், ஆச்சரியம் காட்டுகிறது தலைப்பு செய்தி;  இவையெல்லாம் மறைமுகமாய் மீண்டும் உறுதிபடுத்துகிறது அவன் கீழானவனென்று  இருப்பினும்  புரியாத வெள்ளந்தியான  மக்கள். அவர்தம் வாக்குகளை அபகரிக்க, அந்த  மக்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என இவர்கள் அப்பன்வீட்டு பணத்தில் செய்ததைபோலே, அரசாங்க பணத்தில் செய்ததை சொல்லிக்காட்டி பிழைக்கும் கட்சிகளின் வரிசையில் இவர்களும் இடம்பிடிக்கிரார்கள். எதைசொன்னால் ஓட்டு கிடைக்கும், எப்படி சொன்னால் ஓட்டு கிடைக்கும் என்று சிந்திக்கும் இவர்கள் போன்ற அரசியல்வாதிகளுக்கும், துணி இறக்கி நிற்கும் இரவுநேர ரம்பைகளுக்கும் என்ன வித்தியாசம்.

கக்கனை வழிகாட்டியாக வைத்து அரசியல் நடத்துகிறோம் என்று வாய்மொழியும் நிலையில் தகுதியில் இன்றைய காங்கிரஸ் வட்டாரத்தில் ஒருவருமில்லை. காமராசரின் ஆட்சியை இலக்கணமாக வைத்து ஆட்சி நடத்துவோம் என கூறி நடத்திக்காட்ட அறிவுள்ள, அழகுள்ள, ஆண்மையுள்ள ஒருவரேனும் இன்றைய காங்கிரஸ் வட்டாரத்தில் உண்டா? சுயமரியாதையோ, சுய சிந்தனையோ, இனமானமோ, தன் மொழி உணர்வோ, சுய மாநில விருப்பமோ, தன் மக்கள் நலமோ, கலாச்சார பாதுகாப்போ, சூடோ, சொரனையோ எதுவுமோ இல்லாத இன்றை காங்கிரஸ் கட்சியில் எவருக்கு தகுதியிருக்கிறது அடுத்த கக்கனாக,  அடுத்த காமராசராக வாழ , ஆள . இவர்களால், மைய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கங்காணி வேலைதான் செய்யமுடியும், வெளிநாட்டு வேம்புக்கு வெஞ்சாமரம்  வீசத்தெரியும்... கொள்ளிக்கட்டையை எடுத்து தலைசொரிய தெரியும்... தங்கமென்பதற்காக ஊசி எடுத்து தன் மக்களுக்கே தார் வைக்க தெரியும்... வேறென்ன தெரியும் இந்த வீனர்களுக்கு.

 ஜவகர்லால் நேரு தொடங்கி, இந்திராகாந்தி வந்து, ராஜீவ்காந்தி தொடர்ந்து, இப்போது அவர் மகன் ராகுல்காந்தி பிரதமராக இவர்கள் உழைக்கிறார்கள் ராவும் பகலும் - இவர்கள் அதில் பெறுவது வீரத்தளும்போ அல்லது வெறும் எழும்போ.. பாராளுமன்றத்தை அந்த ஒரு குடும்பத்திற்கு கொடுப்ப்திலேன்னவோ அவ்வளவு சுகம் காண்கிறது இந்திய சமுகம். மழுங்கிய மூளைகளுக்கு, இதுதான் மக்களாட்சியோ? 

வேடிக்கையாக  தோன்றுகிறது, சுதந்திர  போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மோதிலால் நேரு கொடுத்த பங்களாவின் பொருட்டு, இந்தியர்கள் பாராளுமன்றத்தையே  நேரு குடும்பத்திற்கு கொடுத்துவிட்டார்கள் என்று.


வெறுப்போடு வேதனையில் ஒரு கவிதை...

ஆட்சியாளன்,
நம்  பாட்டனுக்கு அவன் பாட்டன்,
நம் தாத்தனுக்கு அவன் தாத்தன்,
நம்  அப்பனுக்கு அவன் அப்பன்,
நமக்கு  அவன்,
இன்றைக்கும் ஆளும் அவன் வாரிசுகள்,
என்றைக்கு ஆளும் நம்  வாரிசுகளும்...?


என் கருத்தோடு காங்கிரசுவிற்கு ஒரு விண்ணப்பம்..

காங்கிரஸ் தோழர்களே...
உண்மையோடும் , உரிமையோடும்  ஊருக்குழைக்க உணர்வுமிக்க
ஒருவரை காட்டுங்கள் அல்லது கட்டுங்கள் என் தமிழ் சாதிக்கு முன்,
கக்கன் காமராசு என்ற கடவுள்களை காட்டி காரியம் சாதிக்கும்முன்...
தன் மக்கள் நலமும் மானமும் நித்தியமென நெத்தியிலேற்றுங்கள்,
மொழியும் இனமும் உணர்வும் சத்தியமென புத்தியை மாற்றுங்கள்,
பெரும் சேவையே தரும் பெரும் சாவையும் கக்கனைபோல், காமராசனைபோல்...

நிசம் புரிவீர்களா, நலம் புறிவீர்களா?
--