ஞாயிறு, பிப்ரவரி 22, 2009

தரணி புகழும் தமிழன்

தமிழிசை கலைஞன் எ.ஆர்.ரகுமான் இன்று வான்புகழ் கொண்டான், தமிழன் வானுயர்ந்தான். பட்டயம் வாங்கியன் பாடிமுடிதான் ஓர் வரியில், "எல்லா புகழும் இறைவனுக்கே". சொல்லி அடித்தான் சொக்கும் தமிழில், சொர்க்கம் சேர்ந்தது எம் இதயம். உலக அரங்கில் ஓங்கி ஒரைதான் ஒரு உண்மை தமிழன், எல்லா புகழும் இறைவனுகென்று. வாழ்க அவன் தமிழுணர்வு, வளர்க அவன் புகழ்.
ஆஸ்கர் வென்றான் அருமை தமிழன், அசைந்து போனது எம்மிதயம்.
வெற்றிகள் பல அவன் குவிப்பான், வேங்கை தமிழ் அவன் புகழ்வான்

--
சாவண்ணா மகேந்திரன்.

புதன், பிப்ரவரி 18, 2009

தொடரும் தீக்குளிப்புகள்

முத்துக்குமார் தொடங்கிய கவனஈர்ப்பு தீக்குளிப்பு போராட்டம் பட்டிதொட்டிகளிலெல்லாம் தொடர்ந்தும் அது உலத்தின் கண்களை உறுத்தவில்லை என, மனமுடைந்த ஈழத்தமிழன் ஐ.நா சபை முன் தன்னை எரித்து மாய்த்துக்கொண்டான் தன்னுயிரை. தொலைநோக்கு பார்வையற்றஅறிவாளிகளுக்கு அருகில் எரிந்தது ஒரு உயிர் என்பதுகூடவா புரியவில்லை. கடிதம் அல்ல கட்டுரை அல்லவா எழுதிவைத்துவிட்டு கருகியிருக்கிறான் அந்த கண்ணியவான். நாய் பூனைகெல்லாம் வாதாடும் மேற்குலகங்கள் மேனி கருகியவன் ஈனஸ்வரத்தில் எழுதியதன்பொருளை இன்னுமா புரிந்துகொள்ளவில்லை?

தன் சாவு ஒருவிடியலுக்கு கூவும் என பேராசைகொண்டவன் நினைப்புகள் நிராசையாய் நிற்பதுவேதனையே.

எல்லாம் டெல்லியால்தான் முடியுமென புழுகி இந்த உலகதமிழர் இன தலைவர், வாய்சொல்வீரர், வழம்புரி சங்கு கருணாநிதியின் கருணை கழண்டுகொண்டது.

கொம்பு சீவி விட்டு வடம்பிடித்த இந்திய அரசு, இப்போது அது அந்நாட்டின் உள்நாட்டுபிரச்சினை என வீம்புக்கு வில்லங்கம் பேசுகிறது, அதற்கு தமிழக காங்கிரஸ் வட்டாரம் ஒரு கையில்விசிறியையும் மறுகையில் திருவோடையும் தாங்கிநிற்கிறது.

தட்டி கேக்கவேண்டிய ஐ.நா, சும்மா ஒப்புக்கு, போரை இருவருந்தான் நிறுத்த வேண்டுமென கூறி தட்டிக்கழிக்கிறது.

இதுதொடர்ந்தால், கத்தி கத்தி தொண்டை காய்ந்த கூட்டம் கடைசியில் கத்தியைதானே தூக்கும். மிதவாதங்கள்திமிர்கொண்டு தீவிரமாவதெல்லாம் இப்புள்ளியில்தானே.

நோய்நாடி அதன் முதல்நாடி ... என வள்ளுவன் இதைத்தானே படைத்துவைத்தன் இருவருயில்.

உரிமைகள் மறுக்கப்படும் பொழுதும், உணர்வுகள் ஒருக்கபடும் பொழுதும் பொறுத்து பொறுத்து வெறுத்து வெடித்து சிதருவதுதான் புரட்சி. புரட்சிகளே தரும் மறுமலர்ச்சிகள்.

கருகியவர்கள் கணம் பெறுவார்களாக. அவர்பொருட்டு நாம் ஈழவிடுதலை மனம் பெறுவோமாக.

--
சாவண்ணா மகேந்திரன்.