வெள்ளி, மே 01, 2009

உழைப்பாளர் தின வாழ்த்துகள் !

தோழர்களே,

மேதினம், மே மாதம் முதல் தேதி, மனிதன் குனிந்து மனிதத்தை நிமிர்த்திய வரலாற்றை போற்றும் நாள். வல்லரசுகளும், வல்லாதிக்க மனித இனங்களும் உழைப்பால் உயர்ந்தவை என உலகிற்கு உச்சரிக்கும் நாள். உழைபவனே உயர்ந்தவன், உயருபவன், மற்றவனெல்லாம் தாழ்ந்தவன்; முப்பாட்டன் சொன்னது.

மனித உழைப்பில் உருவாகியதுதான் இன்றைய உலக வசதிவகும், வாய்ப்புக்களும். உழைப்பில்லாமல் உயர்ந்தவரில்லை, உயர்ந்திருந்தால் அவர் "உயர்ந்தவர்" இல்லை.

உழைப்பு என்பன எவை? வண்டியிளுப்பதும், வாய்க்கள் வெட்டுவது மட்டுமா? இல்லை..இல்லை, சாலை செய்வது மட்டும் அல்ல, மூளை செய்வதும் உழைப்புத்தான்.

காலகட்டங்களுக்கு ஒத்து, மூளையை கசக்கி புது யுக்திகளையும், மனிதமேம்பாட்டு வாய்ப்புக்களையும் கருவாக்கி உருவாக்குபவன் படைப்பாளியாகிறான்; ஆதலினால் படைத்தவனின் அகரதியாகிறான்.

யுக்தியில் பக்தி வைத்து முதலீடு செய்து மனித மேம்பாட்டை முன்னுக்கு இழுப்பவன் முதலளியாகிறான்.

உடலுழைப்பாலும், ஒத்துழைப்பாலும் மனித சக்தியில் மானுடத்தை உந்தி தள்ளி உயர்த்தி பிடிப்பவன் தொழிலாளியாகிறான்.

இவர் அனைவரும் உழைப்பாளியாகிறார், உழைப்பதினால் உயர்சாதியாகிறார்.

படைப்பாளியும், முதலாளியும், தொழிலாளியும் எப்போதும் பங்காளிகளாக வாழ்வார்களாக, மனிதமேம்பாட்டை பேனுவார்களாக.

வாருங்கள் உழைப்பாளர்களே, வணங்குவோம் மேதினத்தை.

--
சாவண்ணா மகேந்திரன்.