வீரம் மட்டுமல்ல விவேகமும் பேசுங்கள் உறவுகளே ...
நாம் கத்தியை தீட்ட தீட்ட எதிரி புத்தியை தீட்டுகிறான்,
தன் சக்தியை கூட்டுகிறான்..
அவன் தன் உக்தியை மாற்றுகிறான் ...
கவனிக்க...
ஆம், கருவி உருவுவோம், கருவி உருவுவோம்
மக்கள் நலன் கருதி உருவுவோம்..
ஓங்கி அடிப்போம் எதிரி தலையில்
சம்மட்டியாலும், சமபுத்தியாலும் ...!
நம்செயலில் நிசமிருப்பதுபோல்
நியாயம் இருக்க செய்வோம் ...
ஆகையால்,
நிர்வாணமாக்கப்பட்ட நமக்கு தேவை நிதானம் ...
நிர்மூலமாக்கப்பட்ட நாக்கு தேவை நிதி மூலம் ...
வன்னிமண்ணில் நமக்கு தேவை தமிழ் வாண்டுகள்..
புத்தம் புதிய புலிக்குபிறக்கும் பூண்டுகள்..
இருபதாண்டுகளில் தேவை இரண்டு லட்சம் வேங்கைகள்..
வழிநடத்த, வணிகம் செய்ய, வரைமுறை படைக்க..
பெறுவோம் தெருவெங்கும் பிள்ளைகள் பத்து...
தேடுவோம் உலகெங்கும் அவைகளுக்கு சொத்து..
தருவோம் அவைகளுக்கு உணர்வும் ஊக்கமும்...
அடுத்து..
நாம் முடுக்க வேண்டியது ஈழத்தில் மூலதனம்...
நம் முடக்க வேண்டியது காடையரின் மூளைத்தனம்..
பத்தாண்டுகளில் பாதி வணிகம் ஈழத்தமிழன் தமிழன் கையில்...
பாதி இலங்கை சொத்து உலகத்தமிழன் தமிழன் பையில்..
முடியாத வேங்கைகளை வளர்த்த வெளிநாடுவாழ் தமிழனுக்கு..?
அறுபது ஆண்டுகளில் கிட்டாத சுதந்திரம்,
இருபது ஆண்டுகளில் கிட்டும்,
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
அறம் பொருள் இன்பம் ஆட்சி அதிகாரம் அரசியல் அறிவியல் நீர் நிலம் காற்று ஆண் பெண் இயல் இசை நாடகம் வீரம் ஈரம் தீரம் மொழி இனம் தேசம் உலகம் மக்கள் மாக்கள் மதம் பக்தி கடவுள் ஆன்மா உயிர் சிந்தை எண்ணம் செயல் என பல விசயங்கள் சார்ந்த என் வல்லின தேடல் தெளிவு தெரிவு உணர்வு பகிர்வு ...
லேபிள்கள்
- அரசியல் (3)
- இசை (1)
- ஈழ விடுதலை (2)
- ஈழம் (1)
- கவிதை (7)
- சமுதாயம் (1)
- சினிமா (1)
- தமிழ் (2)
- தமிழ் ஈழம் (1)
- வாழ்த்துக்கள் (4)
- வாழ்த்துகள் (2)
- Eelam (1)
- Greetinngs (5)
- Kavithai (2)
- Politics (2)
- Society (1)
- Tamil Kavithai (4)
- Tamil Language (1)
- tamileelam (1)
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், டிசம்பர் 13, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)