ஞாயிறு, ஜூன் 21, 2009

யார் கோழை: வேங்கை புலி அவனா, வெறி நாய் நீயா?

உண்மைதான?, நடந்தேறிவிட்டதா?, குதறிவிட்டனவா கொடுஞ்செயல் காலிகள்?, அது அந்த மறத்தமிழனின் உடல்தான?, மரிதிருப்பனா அந்த மாவீரன்? மரணமுண்டோ அந்த மகத்துவ புலிக்கு?, அவன் தப்பி பிழைதிருக்கவேன்டியது தருமமில்லையா? என பல்வேறு சோகம் கலந்த சிந்தனைகளுடன் மிரண்டுகொண்டிருந்த எம்மை கொதிக்க வைத்தது அந்த கொடியவர்களின் கோட்டையிலிருந்து வெளியான குனம்கெட்ட செய்தி ஒன்று. வேதனையோடு எம்மை சிரிக்கவும் வைத்தது கோபத்தின் விளிம்பிளின்னும் குரைக்கும் அந்த குறைமதி கூலிகளின் குமுறல்.

காலிகள் கூடி கெஞ்சி, கூத்தாடி, கூலிகள் வாங்கி, காட்டிக்கொடுத்து, வஞ்சகமாய் நெஞ்சருத்த இந்த வெறிநாய் கூட்டம் விளிக்கிறது அந்த வீரனை கோழை என்று.

http://www.defence.lk/new.asp?fname=20090621LastBattleN

கோபத்தை மட்டும் கொட்டி இருக்கும் இந்த பெட்டை கோழிகளுக்கு புத்தி கூற வெடித்தது என்நெஞ்சு இப்படி ....


இருபத்தைந்து பேருடன் காடு புகுந்து,
ஈராயிரம் பேருடன் களம் புகுந்து,
இருபதாயிரமும் புறமுதுகு வென்று,
முப்படைகட்டி உன்னை மூச்சிரைக்க வைத்த,
இருயானை பலத்தை ஒரு புஜத்தில்கொண்ட,
அந்த மறதமிழ் புலியா கோழை?

நீ படைகட்டி வந்தபோதும் தொடைதட்டி நின்றவன்,
ஒருநூறு ஊடு அறுப்புகளில் உம்முடல் உருப்பறுத்தவன்,
மண்டியிட மறுத்தவன், மானமில்லா வாழ்வை வெறுத்தவன்,
இறுதிவரை களம் நின்றவன், இயற்கையை வென்றவன்,
அந்த வேலுப்பிள்ளை பெத்த வீர பிள்ளை.

கோழையென யாரை கூறுகிறாய் குற்றம்,
வீரனை கோழையென தூற்றும் உம் கூற்றிலுள்ளது குற்றம்,
வித்தியாசம் விளக்கி உரைக்காத உம் குருவிலுள்ளது குற்றம்,
குனம்கெட்ட கூட்டத்தில் தரித்த உம் கருவிலுள்ளது குற்றம்,
அகராதி புரட்டிப்பார் அதுவிளக்கும் கோழை அவனா, நீயா என்று.

--
சாவண்ணா மகேந்திரன்

2 கருத்துகள்:

  1. valid points mahi. the other in the defence article must have been paid to make it look melodramatic.. and that too these are perception led and depends on the want of perception construction.. not sure, how people's army in J&K would feel, how do we feel when insurgency is contained in J&K...

    பதிலளிநீக்கு
  2. sure. i understand why it's written that way - either it's an existing perception or wanting to build that sort of perception on him. however, as an government, treating him as a criminal in their court of law is different from saying mean things about the him even after his death. i felt, it's not a moral or decent for SL govt to have published that kind of an article on their official web-site. it makes me assume a low value on their govt.

    Coming to J&K, although i believe it's not correct to compare J&K issue with Eelam issues, I don't think I would celebrate or say mean things after defeating someone. even in sports we do celebrate victory, but we don't say mean things about the opponent. it would not be of any high value of ours otherwise.

    பதிலளிநீக்கு

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.