புதன், செப்டம்பர் 28, 2016

மழைத்தவளையாய் ....பாகம் 8

சிங்கங்களே... சொல்லுங்களேன்
-------------------------------

தமிழ்ச் சிங்கங்களும்
கன்னடச் சிங்கங்களும்
களம் நகைக்கும் இந்த கழனிச் சண்டையில்
சுழற்றும் வாள்வீச்சில்
வெட்டப்படுவது
வெகுளிப்பய வெள்ளாடுகளாயிருப்பது ஏனோ?
சிங்கங்களே கொஞ்சம் சொல்லுங்களேன்.
     -- சாவண்ணா மகேந்திரன்


ஓர் மொழிக் குடும்பமும்
ஒருவனுக்கொருவன் அடிச்சிக்காம
ஒத்துமையா வாழ்ந்துவிட்டால்
உலகம் கையிமேல மூக்கை வச்சு
கதைகதையா பேசி படிக்கும்
அடிச்சிக்க ஆளில்லாத
ஆயிரம் யுகம் கண்ட
உங்கப்பனோட வரலாறும்
எங்கப்பனோட வரலாறும்.

     -- சாவண்ணா மகேந்திரன்

அப்படி என்ன பகை உனக்குள்
சொந்த ரத்தம் சிந்தக்கண்டும்
பந்த உணர்வு கொள்ள
பதைக்காத இதயம் கொண்ட
பிறப்பா நம் பெரும் பிறப்பு ?




-- சாவண்ணா மகேந்திரன்



காவேரி கடவுளின் குழந்தை
கரையோர உயிர்களின் தாய்
கன்னடனும் தமிழனும் கண்விழிக்கும் முன்னே
குரங்குகளாய் குதியாட்டம் போட
கடல்நோக்கி  நதியாட்டம் நடந்தவள்
அற்பப்பூச்சிகளின்  சதியாட்டம் கடந்தவள்
வாடிய உயிர்களின் வயிற்றினுள் பாய்ந்தவள்
வம்சங்களனைத்தையும் வருடி வளர்ந்தவள்
வாழ்வினை படைத்தவள் வளர்ச்சியை கொடுத்தவள்
வறுமையை ஒழித்தவள் வறட்சியை கழித்தவள்
தெற்கே பிறந்த தெருவோர பூசிக்கும்
தேனாய் இனித்தவள் தானாய் நனைத்தவள்
இயற்கை அவளை அப்படி படைத்திருக்க
யாரடா நீ இடையில் தடைபோட
எவ்வூரடா நீ என் இலையில் மடைபோட
ஏடா மனிதா இதுவோ உம் பெருந்திறமை
எல்லோருக்கும் பொதுவில் வைத்த
இறைபொருளை எனதென்பாயோ
எடடா உன் குடிமறையை
எழுதப்பட்ட வரைமுறையை
இன்னொருமுறை வாசித்துப்பார்
இனியேனும் யோசித்துப்பார்
பூச்சி புழு குரங்குதாண்டிய நீ நான் யார் என்று.

-- சாவண்ணா மகேந்திரன்

அதைச்  செய்யாதே
இதைச் செய்யாதே
என்று அன்போட அடக்கிவைத்து
துன்பமில்லா நல்ல பண்போடு வாழ
வழிசெய்தவர் அவர்,
எதையும் கேள்விக்குள்ளாக்கு
இயற்கையையும்  மீறு
எல்லாமும் பழகு
இனியொருமுறை உலகை படை
என எகிறிக் கேட்டவர் இவர்,
இதில் எங்கே உமக்குச் சுவர்?

  -- சாவண்ணா மகேந்திரன்

அவனையும்
எவனையும்
மட்டும்மல்ல
கேட்க்கும்
இவனையும்
கேள்விக்குள்ளாக்கும்
இறைவனாய் வா
இளவலே!
    -- சாவண்ணா மகேந்திரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.