புதன், அக்டோபர் 22, 2008

வஞ்சிக்கப்படும் வல்லினம்

வாழ்வாங்கு வாழ்ந்த, வல்லமை பொருந்திய நம் தமிழினம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது சொந்தங்களே.


  1. இந்தியா-பாகிஸ்தான் போர்களில், இந்தியமக்களை பாதுகாக்க, இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் பேரில், இலங்கை பாகிஸ்தானின் போர் விமானங்களுக்கு உதவாமலிருக்க, இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட 5 லட்சத்திற்கும் மேலான தமிழர்களின் இன்றை நிலையை எவரறிவார். எங்த நாதியும் இல்லாமல் இந்தியாவந்த அந்த தியாக செம்மல்கள் எங்கு செத்துமடிந்தார்களோ?
  2. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; நம்பி இனைந்த நமை, காரியம் (சுதந்திரம்) முடிந்ததும், வரையபட்ட இந்தியாவெனும் வட்டத்திற்குள் வாழ "இந்தி" கற்க கட்டாயபடுத்தி, மறுத்து போராடிய மானமுள்ள தமிழர்களில் 100-க்கும் மேற்பட்டோரை இந்திய இரனுவத்தின் துப்பக்கிகளுக்கு இறையாக்கியதே அன்றை வஞ்சகதனமான இந்திய அரசு. எவன் செய்வான் இந்த இழிந்தகாரியத்தை? இதையொத்த சுயலாப தந்திரங்களை விழிப்புடன் தடுப்பது நம் பிறப்புரிமை, சமுதாயகடமை. நானும் என் சொந்தங்களும் ஒப்பற்ற என் தாய்மொழியில் உருகமுடியும் பொழுது மாற்றான் தாய்மொழி என்ன மயித்துக்குவே? தேவையுள்ளவன் தேடிக்குவான், திணிக்க எந்த "கோ"மகனுக்கும் உரிமையில்லைவே.
  3. பேருக்குதான் இந்தியன், எந்த பிரச்சினைக்கும் அண்டை மாநிலத்தில் அடிவாங்கி, அவமானபட்டு, கற்பிழந்து கஞ்சி குடிக்கவைத்திருக்கும் இந்த ஈன இந்தியா நமக்கென்ன செய்தது. குறைந்தபட்சம், நதிநீரையாவது முறையாக்க முனைந்ததா? வரிபனத்தாலும், அந்நிய வருவாயாலும் நம்மை உறிஞ்சி வடக்கை வாழ்வைக்குதே தவிற, நம் சொந்தங்கள் இன்னும் நாக்குவழித்துகொண்டுதானே இருக்கிறார்கள். அவலட்சனம் இப்படி கூத்தாட, இந்தி படித்தால் வேலைகிடைக்குமென நயவஞ்சகதனம்வேறு. ஆம், சிப்பந்திகளாகவும், சில்லரைகளாகவும் வடக்கன் கால்துடைக்கும் வேலை நமக்கு நிச்சயம்.
  4. ஆண்டாண்டு காலமாய் தமிழன் ஆளுமையிலிருந்த கச்சத்தீவை, தன் பேடிதனத்தால் (மற்றொரு இந்தியா-பாக்கிஸ்தான் போர், மீண்டும் இலங்கை-பாக்கிஸ்தான் உறவு, மற்றொரு இந்திய--இலங்கை ஒப்பந்தம்) இலங்கையிடம் இழந்த இந்தியா, மீண்டும் மீண்டும் இலங்கை இராணுவத்தால் கச்சத்தீவில் சுட்டுக்கொள்ளப்படும் மீன்வர்களின் உயிர்களை மதிக்கிறதா? மாறாக அந்நாட்டின் பாதுகாப்பிற்கென போர்கருவிகளையும், உக்திகளையும் வழ்ங்கி உற்சாகப்பபடுத்துகிறது. இதுபற்றி மத்திய அரசிடம் நாம் கெஞ்சவேண்டியிருக்கிறது. இதுவரை 320-க்கும் மேற்பட்ட தமிழர்களை (மீனவர்களை) இலங்கை இராணுவம் கொன்றுகுவித்திருக்கிறது. சீரிபாய வேண்டிய இந்திய ஏவுகனைகள் வீரியமற்றுபோய்விட்டிருக்கிறது போன்ற தோற்றம் நமக்கு. 320 தமிழன் உயிர் போனபின்பும், சகலத்தையும் பொத்திக்கொண்டிருக்கிற இந்தியா, ஆப்பிரிக்க கடல்கொள்ளையர்களால் கடத்தப்ட்ட ஒரு இந்தியனை மீட்க போர்க்கப்பலை அனுப்பியுள்ளது, ஏன், அவன் வட்க்கத்தியன் என்பதாலா? இதுவரை போன 320 தமிழனின் உயிர்களுக்கும்/குடும்பத்திற்கும், மீதமுள்ள ஆயிரகணக்கான மீன்வர்கள், அவர்தம் குடும்பத்திற்கு இந்த வீரியமற்ற இந்தியாவின் பதில் என்ன?
நன்பர்களே, பிறநாட்டு தமிழின இன்னல்களை கலையவேண்டாம், உள்நாட்டு தமிழன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வதைக்கப்படுகிறான், வடக்கன் பொருப்பிலுள்ள இனவாத இந்திய அரசுகள் இந்திய தமிழனை உதாசீனபடுத்தி வஞ்சிக்கிறது.
  1. இங்கிலாந்தில் அவமானப்பட்ட வடக்கத்திய நடிகையின் கண்ணீரை துடைக்க நீண்ட இந்திய வெளிவுரவுத்துறையின் கைகள், இரத்தம் வழியும் தமிழக மீனவனுக்காக நீளாதது ஏன்?
  2. ஆப்பிரிக்க குஜராத்தியற்கு நீண்ட இந்திய வெளிவுரவுத்துறையின் கைகள், தமிழீழ மற்றும் மலேசிய தமிழனுக்கும் நீளாதது ஏன்?




வல்லினமே விழி, உடைவாளாய் உறங்காதே,
தூக்கம் கலை, துக்கம் துற,
இனஉணர்வு கொள், இனவெறி கொல்,
ஒதுங்கி இருந்தது போதும்,
தமிழின உணர்வாளனாய் மாறு,
தாய்தமிழ் போற்று, தமிழினம் காத்திடு,
ஓங்கி உரை, காலத்தை எட்டிப்பார்,
எதிர்கால தமிழனமும் செழிக்கட்டும் - அது,
வரலாற்றில் உன்பெயரை செதுக்கட்டும்.



"நல்லதோர் வீனைசெய்து, அதை நலங்கெட புழுதியிலெறிவதுண்டோ?" - மகாகவி பாரதி.

--
சாவண்ணா மகேந்திரன்.

புதன், மார்ச் 12, 2008

சும்மா கிடந்த சங்கை எடுத்து.....

நன்பர்களே,



அண்மையில் நான் அனுபவித்த சில அவலட்சணங்களை பகிர்கிறேன் இங்கே.



*********************************************

மாமதுரை சென்றேன்....

எங்கெங்கு காணினும் போஸ்ட்ரடா

அதில் ஏகமாய் இளிக்கும் வசனமடா

அவை இலகுவாய் பிடிக்குது காக்கையடா

ஆம்.... ஜீரணிக்கமுடியாத வசனங்கள்....சில உம் பார்வைக்கு...

தென்னகத்தின் ஃபிடல் காஸ்ட்ரோவே ........

வாழும் வள்ளுவரே ......

வருங்கால இந்தியாவே ...

இன்னும் எத்தனையோ ஏட்டில் ஏற்ற தகுதியும் நேரமும் அற்ற வசனங்கள்....

இப்படி

காக்காய் பிடிக்கும் கழககாரர்களையும்

வாழ்வதற்கு வாலாட்டும் ஈனர்களையும்

கண்ட கண்ட வார்த்தையில் திட்ட முடியாதால்......

இங்கே இப்படி......

குட்டிச்சுவர் முகர்ந்து ஒடிய நாய் பார்த்து.......

தெருநாய்,

சிறுநீர்கொண்ட சொரிநாய்,

அலைந்தது சுறுசுறுப்புடன்,
மறைத்தது அழைத்தது மொட்டை சுவர்!
நாடியது விறுவிறுப்புடன்.

அங்கே இளித்தது பட்டை வசனம்
படித்தது வெடித்தது,
வெறுத்தது கடுகடுப்புடன்

எங்கே அந்த அண்டை சுவர்?
தேடியது அறுவெறுப்புடன்.

தெருநாய்,
சிறுநெறிகொண்ட மதிநாய்.



*********************************************

செத்துகிடந்த கழுதை பார்த்து ..... நினைத்தது



சுவரொட்டி செய்தி

இனிப்பு தடித்த வார்த்தை

இளித்து பிடித்தது காக்கை

களித்து திண்றது கழுதை

வலித்து செத்தது மறுதை

சலித்து சொன்னது கவிதை

ஜீரணமாகவில்லை

சுவரொட்டி செய்தி.


*********************************************

அப்புறமா.... இது வேற.... குமுதம்.காம்-ல ஒரு கவிஞனின் பேட்டி பார்த்து பொத்துக்கொண்டு வந்தது கோபம்....... அவரை பாராட்ட தோண்றியது....





ஒண்னு ரெண்டு கவியெழுதி

ஊறுபட்ட உரையெழுதி - எல்லாம்

இசைகுள்ள சமைஞ்சதாலே

நானும் கவிஞன்னு

நா தடிக்கும் மக்கா...!

கம்பன் முந்திய கவிராயன்கள்

காளி பாரதி கண்ண தாசன்கள்

பட்டு கோட்டை கல்யாண

சுந்தர வாலி வைர முத்துக்ள்

உருதி யேற்ற
அவர்கவி தரும்
சொற்சுவை கூட்டிக்காட்டும் பொருட்சுவை

யாதும் அற்ற
உன்கவி எனும்
நகைச்சுவை கூட்டும் சதைச்சுவை
நாத்தமடிக்குமப்பா...!

*************************************************************************************
சாவண்ணா மகேந்திரன்