அறம் பொருள் இன்பம் ஆட்சி அதிகாரம் அரசியல் அறிவியல் நீர் நிலம் காற்று ஆண் பெண் இயல் இசை நாடகம் வீரம் ஈரம் தீரம் மொழி இனம் தேசம் உலகம் மக்கள் மாக்கள் மதம் பக்தி கடவுள் ஆன்மா உயிர் சிந்தை எண்ணம் செயல் என பல விசயங்கள் சார்ந்த என் வல்லின தேடல் தெளிவு தெரிவு உணர்வு பகிர்வு ...
லேபிள்கள்
- அரசியல் (3)
- இசை (1)
- ஈழ விடுதலை (2)
- ஈழம் (1)
- கவிதை (7)
- சமுதாயம் (1)
- சினிமா (1)
- தமிழ் (2)
- தமிழ் ஈழம் (1)
- வாழ்த்துக்கள் (4)
- வாழ்த்துகள் (2)
- Eelam (1)
- Greetinngs (5)
- Kavithai (2)
- Politics (2)
- Society (1)
- Tamil Kavithai (4)
- Tamil Language (1)
- tamileelam (1)
வியாழன், டிசம்பர் 07, 2023
ஆகையால் நாதக நாகாக்கக் கடவ.
புதன், ஆகஸ்ட் 17, 2022
வரலாற்றுத் துயரங்கள் : சீம ரசினி கொண்ட ராம ராச்சியம்
வரலாற்றுத் துயரங்கள் : சீம ரசினி கொண்ட ராம ராச்சியம்
என் அகத்திற்கும் புறத்திற்கும் உறவான தமிழர்களே, வணக்கம்.
நடந்த கடந்தவார அரசியல் கதைகளை கட்சிகள் பேதமின்றி நானாகிய நாம் எழுதும் இன்னுமொரு வரலாற்றுத்துயரம்.
கலைஞருக்கு ஒரு #பேனா மட்டுமல்ல ஓராயிரம் பேனா கொடுத்தாலும் தகும், அதை அடுத்தவருக்கு பங்கம் இன்றி எங்கு வைத்தாலும் நலமே. இயற்கையின் பொருட்டு இதை எதிர்ப்பவர்களின் கருத்திற்கு இன்னுங்கூடிய மரியாதையை கொடுத்து, தக்க தவிர்ப்பாடுகள் செய்து, அழகிய பேனாக்களை ஆங்காங்கே வைக்க அரசு ஆவன செய்யவேண்டும்.
பொறுப்புணர்வோடு வெறுப்புணர்வு கலந்து வெகுண்டு எழும் தமிழ்த்தேசிய தமிழர்களே, அறிவிலேற்பீர், தான் கொண்ட கொள்கையை தமிழ் எழுத்துக்களால் ஏட்டிலும் நாட்டிலும் சாதித்த ஒருவனுக்கு அடையாளமாக தமிழர்கள் பேனாவை கொடுத்தார்கள் என்பது ஞாயம் மட்டுமல்ல அதுவே அறிவுங்கூட. கலைஞரின் சட்டைப்பையிலிருந்து பேனாவை எடுத்தெழுதி சொருகிவிட்ட @சீமான் பேனாவை வரவேற்று வாழ்த்து சொல்லுவது அரசியல்க் கடமை, வாய்ப்பில்லை என்பது மடமை.
மீண்டும் சீண்டும் அரசியல் பேசும் அசளூருக்கார திரு திரு அவர்களே, நினைவில் கொள்க, தமிழர் நாடு, அறமும் மறமும் திறமும் அணிதிரண்ட அறிவியல்க்காடு. ஆன்மீக அரசியல் என்று ஆசைகாட்டும் அரிதார அழகர்களே, அதிகார அசடுகளே, அநியாயம் செய்யாமல் அப்பாலே போங்களேன் அவார்களின் அடிமைகளே. தமிழர்களின் மீது அன்புகாட்டுவதாக ஆசைகாட்டும் அடிப்படைவாதிகளே, யாரப்பா நீவு, எங்களுக்கு இரக்கங்காட்ட, நாங்கள் இட்டதில் அடுப்பெரிக்கும் நீங்கள் எங்களுக்கு கருணைகாட்டுவதா? வந்தாரை வாழவைப்பதும், விருந்தோம்பலும் தமிழர்களுக்கு பிடித்தமானது என்பதால், இங்கே தட்டில் எதையும் விதைக்கலாம் என்று நினைத்துவிட்டீர்களா, பொட்டில் எதையும் ஏற்கும் கடவுளின் காவலர்களே? ஏனிந்த உண்டவீட்டிற்கு இரண்டகம் செய்யும் இழிபழி, தமிழர்களுக்கு எதேனும் செய்யவேண்டும் என்றால் அரசாங்க்கத்தை ஏமாற்றாமல் வரிக்கட்டுங்கள், அரசு அனுப்பிய சட்டங்களை அடுத்த நிலைக்கு அனுப்பி வையுங்கள், அதுதான் தமிழர்களுக்கான உங்கள் கடமை, மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள், தமிழ் மக்களாகிய நாங்கள் அறிவியல்வாதிகள், ஆகையால் அப்பாலே போங்கள்.
1) அரசியல் என்பது அனைத்துயிரிக்குமான உரிமை, அதை அவையவை பேசலாம், செய்யலாம், பரப்பலாம், ஆனால் அது பொது நன்மைக்கானது, தனிமனித நன்மைக்கானது அல்ல. 2) அரசியலால் அமைக்கப்பட்ட ஒரு ஆட்சியின் கீழ் இயங்கும் அரசும் அதன் அதிகாரமும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. 3) அரசியல் என்பது மக்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமை-ஒற்றுமைகளுக்கான கருத்துக்களின் அடிப்படையிலான அறமான ஆபத்தில்லாப்போட்டி வைப்பது. 4) அரசு என்பது மக்களுக்கான நன்மைகளை அன்றைய அறிவியலின்படி செய்து வைப்பது, அன்றைய அரசியலின்படி தள்ளி வைப்பது அல்ல. 5) சட்டம், கோட்டை, அரசு, அதிகாரம், அலுவலகம், அதிகாரிகள் போன்றோர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது அவரவருக்கான அரசியல் கருத்துகளின் அடிப்படையில், அவரவர் அரசு அதிகாரத்தை செலுத்திவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கையான தடுப்பே ஆகும்.
இரு அசளூரு ஆன்மீக சனாதன சங்கிகளின் தமிழர்களின்மீதான பரிவுகொண்ட அரசியல் சந்திப்பை, அரசியல், அரசு, அதிகாரம் இதுஇதுவென முழுமையான புரிதல் இருந்தும், தமிழர்களின் மீது ஊற்றப்படும் விளக்கெண்ணையை, மானமும் வீரமும் கொண்ட #நாம்தமிழர்கட்சி விவேகமாக "அரசியல் பேசுவது அனைவரின் உரிமை என ஆதரிப்பது" அனாவசியமானது, ஆபத்தானது. ஆகையால், இங்கே, பேசிய அரசியல் விவரம் கேட்பதே நுனிய விவேகம், அதை வினாவி வெடிக்கும் எதிர்க்கேள்வி கேட்பதே புரட்சி அரசியல்.
பெரியாரின் சிலையை உடைக்க வந்த சிரிப்புச் சண்டை நடிகரே, பார்த்தாலே தீட்டு என பக்குவம் செய்துவைத்த மதத்தின் அரசியலில் மலிந்துவிட்ட மானத்தமிழரே, மனமிருக்கா ஓய் உமக்கு? நீவிர் எழுந்துவிடக்கூடாது என சதி செய்த சாதிய இழிவுகளைக் கொண்டஒரு மதத்தின் எழுச்சிக்கு அறியாமல் தெரியாமல் புரியாமல், அம்மதத்தின் ஒரங்களில் உரங்கிக்கொண்டிருக்கும் உன்னை எழுப்பும் பெரியாரின் சிலையை, எழுந்து வந்து எட்டி உதைக்கிறீரே, நீ விர் எந்த வாதி? கடவுள் என்று ஒன்று இல்லை என்பது நிகழ்கால மானுட அறிவு, அதை அடுத்தவருக்கும் சொல்லி வைப்பது மானுடக் கடமை, அதை அன்று பெரியார் செய்தார், அம்மானுடக் கடமையை இன்றும் அவர் சிலை தொடர்கிறது, நீயும் செய், உன் மானுடக் கடமையை. அறிக, பெரியார் சிலையும் தொடுபவன் தலையும் ஒரே தன்மை பெரும்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்கியவன் காட்டுமிராண்டி, கடவுளை மற, மனிதனை நினை!
மக்களை நினைக்காமல், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாய் உருவிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் அடிவருடிகளாக ஊருக்கு உழைக்கும் உரிமைத் தமிழர்களே, உங்களுக்கு எப்படிச் சொன்னால் எகிரும் என்று தெரியவில்லை. ஒரு கல் தொலைவில் மக்களுடன் தொடர்பிலிருக்கும் ஒரு மாநில அரசிடமிருக்கும் மக்கள் நலவள அதிகாரங்களை ஓராயிரம் கல் தாண்டி இருக்கும் ஓர் ஒன்றியத் தூர அரசு பிடுங்கிக்கொண்டால், அங்கே உட்கார வரும் ஒழுங்கற்ற ஒரு ஊதியக்காரர் அதை ஒருவேலை தவறாகப் பயண்படுத்தினால், ஒற்றைப்புள்ளித் தோல்வி வந்தால் ஒன்றியமே நாசமாகும் மனகன நிலை வரும் என்ற இயற்பியல் தத்துவத்தை என்ன செயவது? அதிகாரக் குவியல் ஆபத்து என்பது உங்கள் அறிவியலில் இல்லையா, அடங்கி வாழச்சொல்லும் ஒரு அரசியல் நாட்டிற்கு கோடா? மின்சார வினியோகத்தையும் விற்கத்துடிக்கும் விற்பனையாளர்களே, பொது வீதியையும் விற்று விட்டு, பிறகு காலார நடக்க எங்கே போவீர்கள், கல்லரைக்கா? அரசுகளும் அதிகாரமும் புதிய புதிய வளர்ச்சிகளை கட்டியமைக்க, இருக்கும் கோவணத்தையும் வித்துப் பறக்க அல்ல. ஆகையால், நல்ல புத்தி கண்டு போவீர்.
தவிர, தாய் நாட்டில் பொழிந்த மழைகள், பதறிய அணைகள், கழண்ட மதகுகள், ஓடிவந்த வெள்ளம், கரைபுரண்ட காவேறி, தரைபுரண்ட தமிழர் சதுரங்கம், ஒளி ஒலித்த ஒப்பில்லாத் தமிழர் வரலாறு, சிக்கி முக்கி சிரிக்க வைத்த திருக்குறள், எல்லாம் இனித்தன, என்னையும் பணித்தன.
மும்மாரி பொழிய,
முழுநிலமும் செழிக்க,
வாழ்த்துகளும்,
வாஞ்சைகளும்.
--
சாவண்ணா மகேந்திரன்.
சனி, ஜூலை 10, 2021
நாம் தமிழர் கட்சி நல்லவர்களே, நன்றி.
அனுப்புநர் :
சா. மகேந்திரன், சான்ஃகுசே, கலி̀ஃபோர்னியா.
உறுப்பினர் 43514685172, நாம் தமிழர் கட்சி, வட அமெரிக்கா.
பெறுநர் :
நாம் தமிழர் கட்சி,
இரவணன் குடில், போரூர், சென்னை, தமிழ்நாடு.
தலைப்பு : வெளிப்படைத்தன்மையோடும், பொறுப்புடைமையோடும் விலகிக்கொள்ளும் விளக்கமடல்.
என் அகத்திற்கும் புறத்திற்கும் உறவான தமிழர்களே, என் மறத்திற்கும் திறத்திற்கும் இணையான தோழர்களே, என் அறத்திற்கும் அறிவிற்கும் சமமான மனிதர்களே, வணக்கம்.
ஒரு இக்கட்டான சூழலில் நான் இட்டுக்கட்டாமல் சாட்சி சொல்லி நம் சந்திப்பிற்கு நன்றி கூறி விலகி நிற்க நான் எழுதும் திறந்த மடல், இது, நான் கடந்த கடல்.
இருண்ட போர் மேகங்களுக்குள், மழைவிட்டும் தூவானம் விடவில்லை எனும் வசனம் கேட்டு விசனமானவர்களில் நானும் ஒருவன். நாடுகளின் கோட்டுக்குள், வீடுகளின் சுவருக்குள் நடுக்கமின்றி ஆடிய தசைகளில் எனதும் ஒன்று. உணர்வலைகள் ஓங்கியது, மனிதச்சங்கிலி தாங்கியது, இராமேசுவரம் கொந்தளித்தது, நாம் தமிழர் வந்துதித்தது என அனைத்திலும் தொலைதூர பங்காளனாக பார்த்துக்கொண்டும் வேர்த்துக்கொண்டும் இருந்த வட அமெரிக்க தமிழர்களில் இனம் காக்க ஓடித்தேடி வந்து கூடிய முதல் ஐந்து தமிழர்களாகிய நாங்கள் 'நாம் தமிழர் அமெரிக்கா' என்ற அமைப்பை கலி̀ஃபோர்னியா மாகானத்தில் பதிவு செய்து, இயற்கை உருவாக்கிய இயக்கத்தை பலமாக்க களமாடியது முதல் நேற்றுவரை என்னாளான கடமைகளை செய்துகொண்டிருந்திருக்கிறேன், தேவைக்கேற்ப பெய்துகொண்டிருந்திருக்கிறேன்.
ஆயினும் தோழர்களே, காலத்தே களமிறங்கிய படையை ஞாலத்தே நன்னிலம் படைக்கச்செய்ய நானாற்றிய பங்கினில், நான் கொண்ட வேள்வியில், நான் கேட்ட கேள்வியில், நான் பெற்ற தோல்வியில், துயர்களுக்கிடையிலும் கண்ட கனவு வெல்ல கொண்ட கொள்கையை கோட்டைக்கு அனுப்புவதற்கு குரல் எழுப்பி, கொடி ஏற்றி, படி ஏறி படைவெல்ல பங்களிப்பு செய்துவந்தேன் ஒரு தமிழனாக, உலக மனிதனாக.
இருந்தபோதிலும், கட்சி விமர்சனங்களை ஏற்காதது, வெளிப்படைத்தன்மை காட்டாதது, பொறுப்புடைமை பேனாதது, சனநாயகம் செய்யாதது, உண்மைக் கணக்கு காட்டாதது, சாதிச்சதி தாண்டாதது, சமூக புரட்சியாளர்களாக களமிறங்கி சமகால அரசியல்வாதிகளாக கலகலப்பது, சமதமிழர்களை உலகிற்கு மதித்துக்காட்டவேண்டியவர்களே சகதமிழர்களை மிதித்துக்காட்டுவது, சொந்த சுகந்திரத்திற்கு பொதுக்கனவை காவுகொடுப்பது, அநாகரீக அடாவடி பச்சைச்கொச்சை பேசுவது, எவரையும் எடுத்தெரிந்து ஏசுவது, சிறார்களை சில்லரை வாதத்தில் இறக்குவது, இரத்தவனையும் இழிவுசெய்து வீசுவது, தனிமனித பாதையாவது, கூடா நட்பால் சேரான இடம் சேர்வது, சொந்தம் பந்தம் உறவு பணிவு ஆகியன அவசியமாவது, இது என்கட்சி என பொதுக்கிணற்றில் எச்சில் உமிழ்வது, இயக்கத்திற்குள் தலைமையை அடக்காது பொது இயக்கத்தையே தனிமனிதனுக்குள் அடக்குவது போன்ற இறந்தகால ஏற்புகளை எதிர்காலப் புரட்சியில் சேர்ப்பது, இன்றே கடைசி என்பதுபோல் இயற்கையை மறந்து இன்னுமொரு ரசிகப்படையாவது, ஏவலாக காவலாக இணையத்தில் இருட்டடிப்பு வேலைகள் செய்வது, இலக்கணப்பிழையையும் இசமென இழுப்பது, கேள்வியின்றி பதிலின்றி கேட்பாரின்றி கேளிக்கையாவது, என இன்னும் சிலபல இடுக்கண்கள் யாவும் என்னறிவிற்கு ஏற்பு இல்லை, அவை யாதும் தமிழ் அறத்தின் திறத்தில் இல்லை.
ஆட்சியில் மட்டுமா புரட்சி, அரசியலிலும் புரட்சி என்றோமே, அதை உட்கட்சியிலும் செய்தல் வேண்டும் என்பது என் முதல் நிலைப்பாடு. சனநாயகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, ஒப்புக்கொடுத்தல் இவையாவும் நல்ல அமைப்பிற்கான நான்கு தூண்கள். வெரும் தனி மனித நம்பிக்கை, தரும் இரும்புக் கம்பிக் கை, நெடுங்கால இயக்க பயணத்திற்கு ஆபத்தானது. கூடும் பெருங்கூட்டம் வேள்வியில்லாது வெறுங்கூட்டமானால் கேள்வியில்லாது தருங்கூட்டமானால், மக்கள் பெறும் பயனானது மாநிலம் மூழ்கும் பெரும் கடனாகிப்போகும். நாம் எதிர்க்கும் கட்சிகள், அவ்வழியில் வந்தனவே, அத்தோல்வி தந்தனவே. ஆகையால் அடிப்படை மாற்றமும் அரசியல் புரட்சியியும் மன்னில் நிகழ, முதலில் அது உன்னில் நிகழ வேண்டும். நம்மில் நிகழாத மாற்றம் நாட்டில் நிகழாது, அகத்தில் நடக்காத புரட்சி புறத்தே நடக்காது என்பது என் தின்னம். அந்த அடிப்படை மாற்றம், அந்த அரசியல் புரட்சி, தமிழர்களின் அரசியல் கட்சிகளின் உள்ளேயே நிகழ்தல் வேண்டும், அது நடக்காததுவரை, தனித்தனி மனிதர்கள் தமிழர்களுக்கு தலைவர்கள் ஆகலாம், காடுகள் மலைகள் கடல்கள் தாண்டியும் கழனிகள் வாங்கலாம், வாழையடி வாழையாக வஞ்சித்து வாழலாம், ஆனால் தமிழர்கள் உலகில் தனித்துவம் அடைய முடியாது, உலகிற்கிணையான ஓர் ஊர் படைக்க முடியாது, வையத்தலைமை கொள்ள வா தமிழா என்பது வெறும் வாய்ச்சொல்லாகவே இனிக்கும்.
உற்றவனாக நடப்பிற்கு ஒத்துப்போவதைவிட, கற்றவனாக மெய் தட்டிக்கேட்பதும் கை தட்டியேற்பதும் நன்மை எனக்கண்டவன் நான். ஆகையால், சிதைவுகளை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த முதல்நிலை மற்றும் கடைநிலை பொறுப்பாளர்களிடம், சரிசெய்யத் தேவையான உட்கட்சி கொள்கைகள், கோட்பாடுகள், கட்டமைப்புகள், வழிமுறைகள், நெறிமுறைகள் செய்துவைத்தல் குறித்து பலமுறை கருத்து தெரிவித்து, திட்டம் தந்து, காத்திருந்து, காலாவதியாகி, வழிவிட்டு வலிதாங்கி இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டிய கடமையை அறமறதிறத்தோடு செய்தும், கட்சியிலும் காட்சியிலும் மாற்றங்கள் ஏதுமின்றி, ஆனிபோயி ஆடிவந்தால் அனைத்தும் ஒருநாள் மாறுமென விதைத்தவன்போல் விதியேற்றுக் காத்திருந்தேன். அடிப்படை புரட்சி செய்யும் அறைகூவல் கேட்டுக் களமிறங்கி, அமைச்சராகும் ஆசையின்றி அறமறதிற அரசியலை முன்னெடுப்போரை ஒதுக்கி ஓடுங்கூட்டம் புரட்சித் தடம் மாறுகிறதோ என ஐயமுறுகிறேன், உட்பயிற்சி இல்லாத உள்ளீடற்ற ஒருகூட்டமாய் அடித்தாடமுடியாமல் அரசியலில் அடுத்தவர்முன் தடுமாறுமோ என அனுமானிக்கிறேன், இருப்பினும் சந்தேகத்தை சாதகமாக்கி வாழ்த்தி வழிவிடுகிறேன், காலம் பதில் சொல்லுமென விழிதொடர்கிறேன்.
அறமறதிறத் தமிழர்களே, அரசியல் ஆளுமைகளே, கண்ட நான் விண்டுவது யாதெனில், தனிமனித துதிமதிபதி தவிர்த்து, மறுயுக மனிதக் குழுவாக, சரிசம நாட்டுக் குடிகளாக, உலகு நிகர் மனிதர்களாக, உள்ளறவு வைக்காமல் ஒட்டும் உறுப்புகளாக, ஒளிவு மறைவு இல்லாத ஓவியங்களாக, ஒண்டிக்கு ஒண்டி உத்திக்கு உத்தி என்பதுபோல், ஒவ்வொருவரும் தன்னறிவோடும், தன்திறத்தோடும், தமிழறத்தோடும் அவரவர் தன்மானமும், தன்னுரிமையும் காக்கும் புதுயுக புனிதர்களாக அரசியலில் வடம் இழுப்பீர் வரலாற்றில் தடம் பதிப்பீர், எனக்கேட்டு, நீவிர் முயன்றதைச் செய்துமுடிக்க, எல்லாம் வல்ல இயற்கை வாய்ப்பும், வல்லமையும் அருளக்கோரி வாழ்த்துகளுடன், வாஞ்சைகளுடன் விடைபெறுகிறேன் எஞ்சோட்டு நாம் தமிழர் நல்லவர்களே, நான் நம்பிய எந்நாட்டு வல்லவர்களே. மண்டியிடாது மானத்தோடும், வீழ்ந்துவிடாது வீரத்தோடும், மங்கிவிடாத ஞானம் சேர்த்து வென்று வருவீர், நன்று புரிவீர்.
அறிவே தலைமை, அறமே பாதை, திறமே கடமை, மறமே உடைமை.
வாழ்க தமிழ்.
--
சாவண்ணா மகேந்திரன்.
நாள்: 7/10/21
இடம்: சான்ஃகுசே, கலி̀ஃபோர்னியா.
வெள்ளி, பிப்ரவரி 01, 2019
அரசியலில் பாயும் புலி
இந்திய அரசியலில், மொழிவழி தேசிய இனங்கள் தம்மை தாமே ஆண்டுகொள்ளும் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் புதிய காட்சிகள் அவ்வப்போது தொடங்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன; சில பொதுதேவைக்காகவும், சில சுய தேவைக்காகவும்.
போட்டியிடும் கொள்கைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கைக்கு குறைவான கொள்கை வித்தியாசங்கள் இருக்கும் சூழலில்தான், ஏதேனும் ஒரு கொள்கையாவது அதன் சிந்தனையை சாதித்துக்காட்ட முடியும், அப்படி முடியாவிட்டால் சரி செய்துகொள்ளவும் முடியும். ஆயிரம் சிந்தனைகள், ஆயிரம் கொள்கைகள், ஆயிரம் நெறிமுறைகள், ஆயிரம் முரண்பாடுகள் இருந்தால் அதனை பகுப்பாய்ந்து சரியானது இவைஇவையென தேர்ந்தெடுக்க நாட்டின் சராசரி அறிவும் வளர்ந்திருக்கவேண்டும். இங்கு நிலைமை அப்படி இல்லையென்பதால் கட்சிகளும், ஆட்சிகளும் நாட்டிற்கு கேடுகளையே விளைவிக்கின்றன.
2 சூளுரை:-
தன்னை தலைவராக உயர்த்துபவர்கள், உலக நிலைமையை அறியாதவர்களாக, தலைமைத்துவத்தை உணராதவர்களாக, சுயதிறமை இல்லாதவர்களாக, தவறான வழிமுறைகளை ஏற்பவர்களாக இருக்கிறார்கள். தலைமையென்பது மாலை மரியாதை வாங்கும் பதவியாக பார்க்கிறார்கள், அது ஒரு பொறுப்பு என்றும், அது ஒரு மனிதனின் உட்சபட்ச ஞாயத்தையும், ஞானத்தையும் ஊருக்கு கொடுப்பதாக இருத்தல் வேண்டுமென்றும் அறிந்தவர்களாக அவர்கள் இல்லை. பெரும்பாலும் தனிமனித செல்வாக்குகளையும் , கொட்டிக்கிடக்கும் செல்வங்களையும் முதலீடாக பயன்படுத்தி வல்லமை சேர்த்து நாட்டிற்கு நல்லதுசெய்ய நினைத்து, தொலைநோக்குப் பார்வையின்றி, வேறேதும் திறமையற்ற ஒரு சுயநல கூட்டத்திற்கு தலைமை ஏற்று, வழிநடத்த முடியாமல் திணறி சமரசம் செய்து, தோற்றுப்போய் தன் கொள்கைகளை நம்பிய மக்களையும், பிற கொள்கைகளை நம்பிய மக்களையும், பொதுவான நாட்டையும் தோற்கடிக்கின்றனர் திறமற்ற தலைவர்கள்.
3 களநிலைமை :-
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், திராவிட கட்சிகள் சாதித்திருந்தாலும், அவை சரிவர நடத்தப்படாததின் விளைவே இன்றைய தற்சார்பற்ற நிலையும் , தலைவணங்கும் நிலையும், தவிக்கும் நிலையும் வரக்காரணமென்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இந்நிலை வருமென்று எத்தனையோ அறிஞர்கள் அன்றே கூறியிருக்கலாம், அவை மக்களால் செவிமெடுக்கப்படாமல் போயிருக்கலாம், ஆனால் தமிழர்களின் அத்தோல்வி இன்னும் தொடர்வது நல்லதல்ல, அது மனித நாகரீகத்தின் அடுத்த கட்டமுமல்ல. வரலாற்றிலிருந்து படம் எடுப்பதுபோல, பாடமும் எடுக்கப்படவேண்டும்.
4 புதிய கட்சி :-
அந்தவகையில், இப்போது நடிகர் ரஜினி ஒரு அரசியல் கட்சியை அமைக்கப்போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார். இன்றைய கள அரசியல் குழுக்களை கிண்டல் செய்தும், எதிர்கால ஆசை காட்டியும், ஆன்மிக அரசியல் எனும் சூட்சும சொல்லோடும் வழக்கம்போல ஊடகங்களுக்கு அவல் கொடுத்திருக்கிறார். கொள்கை விளக்கமெல்லாம் ஓராண்டு கழித்து தருவதாக அவகாசம் கேட்டிருக்கிறார்.
இந்த தருணத்தில், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும், எதிர்பார்ப்புகளுக்கிடையிலும், அவரின் அறிவிப்பை "நம்பிக்கை", "தகுதி ", "திறமை", "முன்னனுபவம்" என்ற நான்கு கோணங்களில் பகுத்தறிய எழுதுகிறேன்.
4.1 நம்பிக்கை :-
பள்ளிப்பருவத்திலிருந்தே ரஜினியின் படங்களை பார்த்தவன் நான். மன்றங்களில் சேராவிட்டாலும், ரசிகனென மார்தட்ட மறுத்திருந்தாலும் ரஜினியின் படங்களை ரசிக்க மறக்காதவன் நான். பெரும்பாலானவர்களைப்போல் "அவர் ரொம்ப நல்லவர்" என்று நான் நம்பியவன் (அவரின் நடிப்பை வைத்து). இருபதுகளில் அறிவியல் உலகையும், முப்பதுகளில், வியாபார உலகையும் விளங்கியபின், நான் தெளியத்தொடங்கினேன், என் முற்கால செய்கை கண்டு நெளியத்தொடங்கினேன். ஒருவரின் தொழில், திறமை, வாய்ப்பு, வசதி, மாலை, மரியாதை, அறிவு, சிந்தை, செயல், எண்ணம், வண்ணம் என படிக்க கற்றபின், அவர் எனக்கு ஒரு சாதாரண பொழுதுபோக்கு பொம்மையானார், அவ்வளவே அவரும் உண்மையானார்.
இருப்பினும், அவர் மிகமிக நல்லவரென்றும், அவரென்றும், இவரென்றும், ஆழமான அறிவாளிகளும், மட்டமான மைந்தர்களும் ஆராதிக்கின்றனர், ஆமோதிக்கின்றனர். இது அவர்களின் நம்பிக்கை. ஆனால், எதைவைத்து நம்புகிறீர்களெனக்கேட்டால், ஒரு சிலரே யூகமில்லா தான்கண்ட உத்தமமான பதில் தருகின்றனர், பெரும்பாலானோர் சொல்வது வெறும் கேள்வி ஞானமே.
திரைப்படத்தில் அவர் நடித்த கதை, ஏற்ற பாத்திரம், பேசிய வசனம், பாடிய பாடல் போன்றவற்றை சான்றாக கூறுவதை முட்டாள்கள் கேட்டுக்கொள்ளட்டுமென விட்டுவிடுவேன். எனக்கு என் அறிவுக்கேற்ற விளக்கம் தேவை, விளக்கம் இல்லாததுவரை, அது ஒரு விளங்காத பேச்சுத்தான்.
ஒருவர், ஒருவரின் நம்பிக்கையை நடிப்பால் பெறுவதற்கும், நடித்து பெறுவதற்கும் வேறுபாடுகளுள்ளன. அவர் நல்லவரேனும் அவர்மீதிருக்கும் நம்பிக்கையை நான் அப்படித்தான் பகுக்கிறேன்; நிசமா, நடிப்பா எனக்கேட்கிறேன்?
4.2 தகுதி :-
சட்டத்தினால் ஒன்றிணைத்துக் கட்டப்பட்டுள்ள இந்நாட்டில், குடிமகன் யாவரும் மக்களாட்சியின் மணிமுடியை கொய்யவரலாம், நாட்டை நல்ல வழியில் நகர்த்த வரலாம். மக்களாட்சியில் அது அனுமதித்து சம்பளம் கொடுத்து வைக்கப்பட்ட வேலை, அந்த வேலைக்கு திராணி இருப்பவர் வந்து நிற்கவேண்டுயது அவர்தம் கடமை. சட்டத்தகுதி சரளமாக இருக்கவேண்டும், அறத்தகுதி ஆயிரமாயிரம் இருக்கவேண்டும் வேண்டுமென்பது எனது ஆசை மட்டுமல்ல, அது என் அறிவின் தேவையும்கூட.
ஒரு பொதுவேலையை செய்வதற்கான அறத்தகுதியாவன,
இருக்க வேண்டியது
- செய்வதற்கான விருப்பம்
- செய்து முடிக்கும் பொறுப்புணர்வு
- கிடைக்கும் கூலிக்கான விசுவாசம்
- சுய விருப்பு-வெறுப்பு
- சுயலாப உள்நோக்கம்
- சுய சித்தாந்த கட்டாயம்
இவைகளில், ரஜினிக்கு இருக்க வேண்டியவை இருந்தாலும், இருக்க கூடாதவைகளும் இருக்கிறன்ற என்பது என்னறிவு.
4.3 திறமை :-
திறமை என்பது ஒரு வேலையை ஒரு செய்து முடிப்பதற்கான உடல், உள்ளம், உயிர் சார்ந்த பலம், வேலையின் தன்மை சார்ந்த படிப்பு, பயிர்சி, தேர்ச்சி. இங்கே இந்திய அரசியலில் வெகு சிலரே அரசியல் சார்ந்த துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள், பெரும்பாலும் தலைவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக, மக்களுக்கு ரசித்து பொழுதுபோக்க ஏதுவானவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலை, சரியில்லாதது, மாற்றவேண்டியது.
இங்கே மாற்றம் தேவை, அது ஆட்களில் இல்லை, அவர்தம் அறிவில், அவர் தம் சிந்தனையில், அவர் தம் செயல்தரத்தில். அவ்வகையில், பெரும்பாலான தலைவர்கள் பெரும்பாலும் திறமை அற்றவர்களாகவே இருக்கின்றனர்.
ஒலிம்பிக்கில் நாட்டிற்காக ஓடி வெற்றிகொள்ள, ஓடப்பழகியவன் மட்டுமல்ல ஓடி ஓடி இருகியவன் தேவை, நமக்கு பிடித்தவனை அனுப்பினால் அவமானம்தான் மிஞ்சும், அவனுக்கும் ... நாட்டிற்கும். அவ்வகையில் ரஜினிகாந்த் எந்த ஒரு அரசியல் திறமையும் இல்லாதவராகவே தோன்றுகிறார், அவரை வெறும் மக்கள் விரும்பும் ஒரு மனிதராகவே காண்கிறேன். திறமை என்பது வேறு, மரியாதை என்பது வேறு.
4.4 முன்னனுபவம் :-
ஒரு தலைமை வேலையாளனுக்கு முன்னனுபவம் மிகவும் முக்கியமானது. முன்னனுபவம் இல்லாதவனை வேலைக்கு அமர்த்த எந்த அறிவாளியும் விரும்புவதில்லை.
தலைமைப்பொறுப்பென்பது வெறுமனே ஒரு கூட்டத்தினை கட்டுக்கோப்பாக வைப்பது மட்டுமல்ல, பெரிய வேலைகளை உடைத்து சிரியவேலைகளாக்கி வேலைகளை ஒவ்வொரு வனுக்குக்கும் பிரித்துக்கொடுப்பதும், செய்த வேலைகளை சரிபார்ப்பதும், சரிபார்க்கப்பட்ட வேலைகளை இணைத்து அந்த பெரியவேலையை முடிப்பதும் ஆகும். ஒவ்வொரு சிறு வேலையையும் முன்பே செய்து பழகியிருத்தல் அவசியம், அதுதான் முன்னனுபவம்.
அத்தைகைய முன்னனுபவம் இல்லாதவன் தலைமையேற்பதென்பது, ஓட்டிப்பழகாதவன் கையில் ஒரு கப்பலை கொடுத்து ஓட்டச்சொல்வதுபோலாகும். அதிலும் ஒரு நாட்டை ஓட்டச்சொல்வது, அந்தக் கப்பலில் நாமும் பயணம்செய்வதுபோலாகும். இதை எழுதும்பொழுதே எனக்கு கைநடுங்குகிறது.
ஒரு கப்பல் கடலில் நகர்ந்துகொண்டிருக்கும்பொழுது அதன் மாலுமி தூங்கலாம், ஓய்வெடுக்கலாம், அடுத்தநிலை ஆட்கள் தேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், அதற்காக ஒரு மங்கினியை மாலுமியாக்கி மகிழ்ந்தால், அவன் தூங்கும்போது அவரின் ஆட்கள் பயணிகளை பார்த்துப்பார்த்து கொல்லவும் முடியும், அனுபவமற்ற மாலுமி அதை கண்டுபிடிக்கவும் முடியாது, கட்டிக்காக்கவும் முடியாது.
அரசியல், அரசாங்கம் சார்ந்த முன்னனுபவம் ஏதுமில்லா ரஜினி, முந்திக்கொண்டு முதல்வரானால், பயணிகளாகிய நாம் மூச்சடக்கி வாழ பழகவேண்டும், அதுவே அவருக்கு அரசியலில் முதல் அனுபவமாக இருக்கும். முன்னனுபவம் முக்கால் தாண்டல்.
5 முடிவுரை :-
இல்லை இல்லை அவர்ரொம்ப நல்லவர், மிகவும் திறமைசாலி, பெரிய அறிவாளி, ஆன்மிக விஞ்ஞானி, அவர்.... இவர் என்று வாய் இனிக்கபிதற்றும் ரசிகசிகாமணிகளும், இப்படி ஒரு பெரிய ஆளுமைதான் இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை கொண்டுவரத் தேவை எனக்கூறும் அரசியல் மேதைகளும், அவரைவைத்து அம்பானியாகத்துடிக்கும் வியாபார காந்தங்களும் என்னைத்தாண்டிவிட்டு செல்லும்படி அதிமேன்மையாக ஆணையிடுகிறேன்.
வியாழன், மார்ச் 09, 2017
Hello Mr Subramanian Swamy
I've read you, heard you, watched you and following you in social forums/news for over a decade now. I admire you for your accomplishments.
Having said that I must tell you I am not your fan. I am an ethical Tamilian by birth and an equal Indian by law.
I've been watching you using demeaning words in social media to refer to sects of Tamils. I do know the opposite side is using bad language as well ; not considering your stage and age. I do understand that everyone has a reason for what they are doing, but I don't agree. I am supporting neither of you (i.e you and them) w.r.t the word-play you both seem to enjoying in social media.
However, of late, I noticed some of your followers also started using similar and generalized demeaning words in public to refer to Tamils in general. I understand and I would not blame them. It is their lack of understanding of richness of Tamil heritage and misinterpretation of your views. I presume that none would challenge me on the history of Tamil as a language, culture, landmass, etc, etc.
I think, your personal views and expressions in social media sets up a wrong imagery of Tamils in the hearts and minds of the millions of next generation Indian youths. I am afraid, it is going to divide even the next generations of the country and continue to grow the mistrust and disrespect currently meant to each other. I know, it is not good for anyone and it's wrong.
You being a well educated, well trained, well traveled doctorate professor, I know I don't have to advise you on how to groom the next generation in love and harmony, so I only request you the same.
I hope you would rethink and rephrase your statements with good choice of words conveying the message that you want your country to hear from you. Thus you lead a good set of beautiful hearts and brilliant minds. If you do so, I believe, it would be yet another good help done by you to your country and to yourself in history.
I know you don't give up on your rights and you would put a fitting fight to win it over. I like that. I believe you are at good position to support everyone who is fighting for rights and guide them towards a mutually beneficial solution by sacrificing your intelligence, focusing your energy, swallowing all bitterness.
Thanks for taking time to read. Thanks for thinking about this letter later.
Wish you all the very best.
புதன், செப்டம்பர் 28, 2016
மழைத்தவளையாய் ....பாகம் 9
அதுங்க
பொறந்து வளர்ந்து
உருண்டு புரண்டு
வளர்ந்து நடந்து
படித்து பட்டு
அறிவில் வளர்ந்து சிறந்து
பொருளில் வளர்ந்து உயர்ந்து
உறவில் கூடி குழவி
கெஞ்சிக் கொஞ்சி
பெத்து வளர்த்து
மகிந்து குளிர்ந்து
வாழ்ந்து கழித்து
வருங்கால தலைமுறைக்கு
வக்கனையா இடம்விட்டு
சொர்க்க வாழ்க்கையை
சுகமா இழக்கிறதுங்க
அதுங்க எதுங்க ?
===========================
நட்சத்திரம் லட்சம் இருக்கலாம்
ஆனா நிலா ஒண்ணுதானே என்று
காதலி முகம்பார்த்து கவிதை சொன்ன முதல் மனிதனுக்கு
ஒரு ஒரு நட்சத்திரமும் ஓராயிரம் நிலாவை
உள்ளடக்கியதுன்னு தெரிஞ்சிருக்குமா
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ?
==============================
மொழிச்சண்டை
இனச்சண்டை
இடச்சண்டை
போட்டு
பழகி
முத்தி
முதிர்த்து
முன்னேறி
இப்போ
வானம்
அண்டம்
பேரண்டம்
நோக்கி
அறிவுச்சண்டை
போட்டுக்கிட்டு இருக்காங்கே அவெங்கே...
நமக்குத்தான்
எளவு இந்த இலைச்சண்டையை தாண்ட வரமாட்டேங்கிது...!
தாய் தந்த மொழி காக்க
மொழி தந்த குணம் காக்க
குணம் தந்த இனம் காக்க
இனம் வாழும் நிலம் காக்க
நிலம் வாழும் உயிர்கள் காக்க
உயிர்கள் பேணும் உரிமை காக்க
உரிமை காணும் சந்ததி காக்க
சந்ததி கற்கும் சமத்துவம் காக்க
சமத்துவம் தரும் சமாதனம் காக்க
சமாதனம் கொணரும் சந்தர்ப்பம் காக்க
சந்தர்ப்பம் வகுக்கும் சாதனை படைக்க
சாதனை மூலம் உலகில் வேதனை துடைக்க
வாருங்கள் உறவுகளே,
அணிதிரள்வோம்
அருள்பெருவோம்
வழியமைப்போம்
வாகைசூடுவோம்
ஆட்சியமைப்போம்
ஆவனசெய்வோம்...
-- சாவண்ணா மகேந்திரன்
==========================
மழைத்தவளையாய் ....பாகம் 8
-------------------------------
தமிழ்ச் சிங்கங்களும்
கன்னடச் சிங்கங்களும்
களம் நகைக்கும் இந்த கழனிச் சண்டையில்
சுழற்றும் வாள்வீச்சில்
வெட்டப்படுவது
வெகுளிப்பய வெள்ளாடுகளாயிருப்பது ஏனோ?
சிங்கங்களே கொஞ்சம் சொல்லுங்களேன்.
-- சாவண்ணா மகேந்திரன்
ஓர் மொழிக் குடும்பமும்
ஒருவனுக்கொருவன் அடிச்சிக்காம
ஒத்துமையா வாழ்ந்துவிட்டால்
உலகம் கையிமேல மூக்கை வச்சு
கதைகதையா பேசி படிக்கும்
அடிச்சிக்க ஆளில்லாத
ஆயிரம் யுகம் கண்ட
உங்கப்பனோட வரலாறும்
எங்கப்பனோட வரலாறும்.
-- சாவண்ணா மகேந்திரன்
அப்படி என்ன பகை உனக்குள்
சொந்த ரத்தம் சிந்தக்கண்டும்
பந்த உணர்வு கொள்ள
பதைக்காத இதயம் கொண்ட
பிறப்பா நம் பெரும் பிறப்பு ?
-- சாவண்ணா மகேந்திரன்
காவேரி கடவுளின் குழந்தை
கரையோர உயிர்களின் தாய்
கன்னடனும் தமிழனும் கண்விழிக்கும் முன்னே
குரங்குகளாய் குதியாட்டம் போட
கடல்நோக்கி நதியாட்டம் நடந்தவள்
அற்பப்பூச்சிகளின் சதியாட்டம் கடந்தவள்
வாடிய உயிர்களின் வயிற்றினுள் பாய்ந்தவள்
வம்சங்களனைத்தையும் வருடி வளர்ந்தவள்
வாழ்வினை படைத்தவள் வளர்ச்சியை கொடுத்தவள்
வறுமையை ஒழித்தவள் வறட்சியை கழித்தவள்
தெற்கே பிறந்த தெருவோர பூசிக்கும்
தேனாய் இனித்தவள் தானாய் நனைத்தவள்
இயற்கை அவளை அப்படி படைத்திருக்க
யாரடா நீ இடையில் தடைபோட
எவ்வூரடா நீ என் இலையில் மடைபோட
ஏடா மனிதா இதுவோ உம் பெருந்திறமை
எல்லோருக்கும் பொதுவில் வைத்த
இறைபொருளை எனதென்பாயோ
எடடா உன் குடிமறையை
எழுதப்பட்ட வரைமுறையை
இன்னொருமுறை வாசித்துப்பார்
இனியேனும் யோசித்துப்பார்
பூச்சி புழு குரங்குதாண்டிய நீ நான் யார் என்று.
-- சாவண்ணா மகேந்திரன்
அதைச் செய்யாதே
இதைச் செய்யாதே
என்று அன்போட அடக்கிவைத்து
துன்பமில்லா நல்ல பண்போடு வாழ
வழிசெய்தவர் அவர்,
எதையும் கேள்விக்குள்ளாக்கு
இயற்கையையும் மீறு
எல்லாமும் பழகு
இனியொருமுறை உலகை படை
என எகிறிக் கேட்டவர் இவர்,
இதில் எங்கே உமக்குச் சுவர்?
-- சாவண்ணா மகேந்திரன்
அவனையும்
எவனையும்
மட்டும்மல்ல
கேட்க்கும்
இவனையும்
கேள்விக்குள்ளாக்கும்
இறைவனாய் வா
இளவலே!
-- சாவண்ணா மகேந்திரன்
ஞாயிறு, பிப்ரவரி 08, 2015
மழைத்தவளையாய் ....பாகம் 7
கோடையிலேயே உழுதுபோட்டு
கொளுத்தும் வெயிலில் காயப்போட்டு
மழைக்குமுன்னே விதைவிதைத்து
முளைத்தபின்னே களையெடுத்து
பொழுதுவிடிஞ்சா வானம்பார்த்து
பொழுதுமுழுக்க பூமிபார்த்து
வேலைபார்த்து வேவுபார்த்து
வேலியடைச்சு வெளையவச்சு
கதிரறுத்து களம்சேர்த்து
காற்றுள்ளபோதே தூற்றிச்சேர்த்து
கடைசிபயலும் கல்லூரிபடிக்க - அப்பா
கனமான நெல்லெல்லாம் கடைக்கனுப்ப - அம்மா
கருக்காயை வீடுசேர்த்தாள் உணவுக்காக.
-------------------------------------------------------------------
மொட்டாகி பூவாகி
காயாகி கனியாகி
விதையாகி மண்ணில் விழுந்து
உயிராகி பயிராகி
வேராகி மரமாகி
சிலது பழுக்கும்
சிலது கொழுக்கும்
இயற்கை அதைக்கண்டு சிரிக்கும்
இருந்தும் மீண்டும் வளர்க்கும்
மொட்டாகி பூவாகி
-------------------------------------------------------------------
அவனுக்கு அடங்கா அறிவாளிகளே
மனச்சுமையை இறக்கிவைக்க இடமிள்ளாதவர்களே
மனம் ஒடுக்கி மந்திரனவன் முன்
தினம் மந்தியென இருந்து பாரும்
அவன்னில்லையெனவும் தெரியும்
அவனின் நிலைத்தன்மையும் புரியும்.
-------------------------------------------------------------------
சொல்லாத சோகம்,
வெல்லாத மோகம்,
கொல்லாத காதல்,
பொல்லாத பாவம்,
கொள்ளாத வீரம்,
தள்ளாத நட்பு,
இல்லாத கூடு எது, ஏது...?
-------------------------------------------------------------------
Assume your role
Aggregate your thoughts
Arrange your words
Ascend your statements
Articulate your message
Assert your opinion
Amuse your crowd
Amaze your audience
Argue your case
Achieve your goal
Archive it in history.
-------------------------------------------------------------------
மொழி தந்த குணம் காக்க
குணம் தந்த இனம் காக்க
இனம் வாழும் நிலம் காக்க
உயிர்கள் பேணும் உரிமை காக்க
உரிமை காணும் சந்ததி காக்க
சந்ததி கற்கும் சமத்துவம் காக்க
சமத்துவம் தரும் சமாதனம் காக்க
சமாதனம் கொணரும் சந்தர்ப்பம் காக்க
சந்தர்ப்பம் வகுக்கும் சாதனை படைக்க
சாதனை மூலம் உலகில் வேதனை துடைக்க
வாருங்கள் தோழர்களே,
அணிதிரள்வோம் அமைதிகாப்போம்
வழியமைப்போம் வாகைசூடுவோம்
ஆட்சியமைப்போம் ஆவனசெய்வோம்..!
கருவறையை கழுவுதலும்
கழிவறையை கழுவுதலும்
பொதுமக்கள் வாழ்வை பேணும்
புனிதமான செயல் எனக்கொள்வோம்...
----------------------------------------------------
திட்டுவதற்கு பயப்படகூடாது, அது கடமை,
திட்டுவதிலேயே சுகப்படக்கூடாது, அது மடமை,
திட்டியபின் பயந்துசாகக்கூடாது, அது கொடுமை,
திட்டத்தெரியாமல் திட்டக்கூடாது, அது புலமை,
திட்டினால் திமிரக்கூடாது, அது பழமை,
திட்டுவாங்க சளைக்கக்கூடாது, அது புதுமை,
திட்டுவாங்கியே பொளைக்கக்கூடாது, அது கயமை,
திட்டியபின்னும் திருடக்கூடாது, அது முடமை,
திட்டியே தீர்ந்துபோகக்கூடாது, அது வெறுமை,
திட்டித்திட்டியே திருத்தக்கூடாது, அது பகைமை,
திட்டத்திட்ட ஒதுங்கக்கூடாது, அது சுயமை,
திட்டத்திட்ட ஒடுங்கக்கூடாது, அது கோழைமை,
திட்டுவது திருத்துவதுக்கு, உம்மை தீட்டுவதற்கு...
திட்டுவது வன்முறையல்லவோய், நன்முறை...
வாருங்கள் தோழர்களே,
வரிந்துகட்டிக்கொண்டு திட்டிக்கொள்வோம்,
மாறிமாறி தீட்டிகொள்வோம்...
வன்செயல் அறுக்க, நன்செயல் செதுக்க.
வெள்ளி, மார்ச் 01, 2013
புலம்பலை நிறுத்தடா புத்திகெட்டவனே
புலம்பலை நிறுத்தடா புத்திகெட்டவனே
பாலகன் கொல்லப்பட்டது புதுச்செய்தி அல்லவே...
கருவறுக்க காடையன் கதவருகே வரும்வரை
கயமை தோழமையோடு கண்பொத்தி நின்றவனே..
நிறுத்தடா உன் ஓலத்தை
துடையடா உன் கண்ணீரை
முன்னோர் பகை தீர்க்க
மூன்றாவது ஆள் எதற்கு?
மூளையை சலவை செய்
திடந்தோளை திடமாக்கு
திமிரும் உணர்வை உரமாக்கு
இதயத்தை இன்னும் ஈரமாக்கு
தகப்பனிடம் ஆசிபெறு
தாயிடம் மன்னிப்பு கேள்
கடைசியாய் காதலியை பார்
கருவி அல்ல காகிதம் ஏந்து
புதிய ரௌத்திரம் பழகு
மொழிகாக்க அவ்வழிவந்த இனம்காக்க
புது யுத்தம் புகு, புது உலகு படை
உன் பிறப்பை பூர்த்திசெய்...!
வெள்ளி, நவம்பர் 30, 2012
மழைத்தவளையாய் ....பாகம் 6
காக்க காக்க அகிம்சை காக்க
---------------------------------
தீயது கண்டும் வாய்பொத்தி நின்றேன்
தீயது கேளாமல் செவிபொத்தி நின்றேன்
தீயது தெரியாமல் கண்பொத்தி நின்றேன்
அகிம்சை மாகையால் அன்று
ஆகையால் இன்று
தீயது என்ற தீ அது தெருவெல்லாம் எரிய கண்டேன்
தொருவோர வெரும்புளுதி எனைப்பார்த்து நகைக்க கண்டேன்.
கதையல்ல நிசம்...
--------------
அவனை சற்று உற்றுபார்த்தேன்,
அறிவை கொஞ்சம் தட்டிப்பார்த்தேன்,
ஆர்பரிக்க மேதாவியாய் பேசிப்பார்த்தேன்,
அவன் சிந்தையை அதன்மூலம் அளந்துபார்த்தேன்,
அவன் கொண்ட கொள்கைககளை கொளுத்திப்பார்த்தேன்,
கொதிக்குமவன் குணத்தை வலிய சீண்டிப்பார்த்தேன்,
முறைக்குமவன் மூளையை மட்டம் தட்டிப்பார்த்தேன்,
கோபத்தில் குமுருமவன் குடுமி பிடித்துக் கேட்டேன்,
சினந்து பொங்கும் அவன்மீது வாளித்தண்ணீர்போல் - பாய்ந்து
எரியும் எண்ணம் அனைத்தேன், அவனை என்னோடினைத்தேன்,
புரிந்த அவன் புன்னகைக்க சரிந்து நானும் மன்னிக்கக்கேட்டேன்,
மதிசார்ந்த நல்ல ஒரு நண்பன் கிடைத்தான்,
மரணத்திலும் மறக்கமுடியா மனிதன் கிடைத்தான்.
குருந்தலை கவிதைகள்
தாயை சந்திப்பது போல
இனிமையானது முழுமையானது.
தின்னப்படுதலே சுகமென உணர்ந்ததால்
என்னால் உண்ணப்பட காத்திருக்கிறது
என் தட்டில் உணவு.
மனம் வெறுக்கும்போது உறுமிப்பார்,
புரட்சி அன்று மண்ணில் வெடிக்கும்,
புலிக்குட்டி ஒன்று உன்னில் பிறக்கும்.
சிந்தனையை கிறுகிப்பார்
உனக்கும் கவிதை வரும், காவியமும் கைகூடும்.
நோக்கமின்றி சற்று உன்னை கிளறிப்பார்
பொழுது மட்டும் அல்ல உன் பழுதும் போகும்.
ஞாயிறு, மே 20, 2012
பொறியும் கேள்விகளும், பெரியாரியல் பதில்களும்.
சனி, மே 19, 2012
மழைத்தவளையாய் ....பாகம் 5
இரண்டாயிம் வருடம்
செவ்வாய், ஜனவரி 17, 2012
Mr Krishna is writing fate of striking people of tri-kings...
First Indira Gandhi gifted "Katcha theevu (island) which belongs to Ramanathapuram(TN) Sethupathy.." to Sri Lanka for it to stop helping Pakistan during Indo-Pak war 1...
Then another gang"ress"-man agreed to migrate back 500, 000 "mailaiyaga" Tamils and made them homeless in TN. i.e British govt migrated these people from TN to Sri Lanka to work in tea estates on a promise to provide dignified life & safety, but later the "free" Sri Lankan denied every possible human rights to them.... The gangress-men boasted they saved Tamils from slavery....i.e slavery to homeless... This was another gift to Sri Lanka in another Indo-Pak war 2...(Note: These people are not "Eelam" Tamils; they are supposed be inhabitant of the island nation..)
Then another gang"ress"ster who inherited everything but the gene from his mother, intruded into Sri Lanka Tamil land, out of unnecessary fear and against his mothers plan, killed 20,000+ lives (including Indian men in army) and led himself to grave to end and destroy 100,000+ lives, homes, families and destroy their 60+ year struggled "dream and strength" for freedom...
Of late, ever since the so-called peace installed in Sri Lanka, fishermen from TN shore have been brutally attacked/murdered/punished while fishing and also denied rights to enter "Katcha Theevu" despite the facts that these fishermen have been using the island "katcha theevu" since history in memory and very importantly the "gift-agreement" done by Indira Gandhi govt has provisions for the same.... however, of late, SL Army illegally denies entry to island (rest area for fishermen).
While this has been the past of these half-dead men's diplomatic ability or interest to get into agreements w.r.t to the people of tri-kings...Another man from the same doomed building of Delhi is signing an agreement with Sri Lanka which is supposed to regulate the fishing rights of both country fishermen... Sri Lanka's is been asking TN to give up their demand to freely fish in the waters as their heritage based on the history i.e Sethupathies and Cholas were spread out to that extent and were ruling the waters and parts of the island nation and so the fishermen of both lands were happily fishing coast-to-coast...
I only hope this empowered man from the haunted building of Delhi thinks straight and right to safeguard the lives of both Sri Lankan and Tamilan generations and not designs it to use as a trump card to handle the striking people of tri-kings of ever-rebellious southern state...!!!
புதன், ஜனவரி 04, 2012
Midnight conversation with corporaton workers...
"Vannakkam-sir", they said.
No bullshitting or beating around that garbage pile...I asked the question straight.
"Were you not given any protection gear to use when you deal with such infectious garbage?"
"We are used to it, sir, you don't worry", said the elder man (without realizing two wanna-be social reformers standing right there to change to fate overnight. :-)
"But wait, I asked, what would happen when you go back to your family with this virus and bacteria. Won't this affect your children? Are you not worried...?".
"It's our fate sir, what can we do..? We neither we studied nor scored good scores..."
I said "well, you don't have to have a good education to do this job. All you need to be is strong enough which you already are. You are fully qualified to do this job. All you need to know is how to demand what you need to perform this job well...such as tools, techniques, process, benefits, fitness-support;healthcare, etc...".
He did not seem to have understood all what I said but he got something at least....i.e the benefit part
He replied, "They are not even paying us on time, Sir. Where can we ask for all those. These things would never change here, sir".
I was bit upset on his ignorant and given-up answer. Also it's true that our educated and empowered men are not manly enough to face and solve these local problems. Including me, we are happy and proud to do lip-services to western world.
I said "well, everything will change if you use that shovel right..."
He asked "how, sir..?".
I replied "shove it right up there in that person who does not provide you with or denies all you rightfully deserve...."
Now the younger man Mr. X spoke finally but firmly. Holding his shovel firmly he asked us "show me that one person in the government, sir..."
We blinked. We had no answer for him. Yes, it's true in goverment it's hard to point out the responsible individual who can fix it right now or later but sooner.... Not only many in goverment are irresponsible and only self-centered but when you deep dive everyone points you to the system so called "goverment" (bunch of forms and worms of no use) which is massive, invisible and void like open space... Sometimes, one tends to think, perhaps dictatorship is better because Mr. X would have at least known whose mouth it is that he should shove his shovel into...
Having no answer we were standing quiet. He was still expecting an answer from us. None of us knew who it could be... the Collector, the Corporation Director, the MLA, the MP, the CM, the PM or the President....who is it?
Having no answer we walked out telling them "let not your next generation to this job...". Let the future citizens of this country clean their own shit until they pay for it appropriately...
They both smiled confidently.
வெள்ளி, நவம்பர் 18, 2011
Not No Nuclear, No Koodangulam..
We
oppose koodangulam nuclear power plant, not because we don't understand
that it's good for the country & citizens..., it's because we know
that it's not safe and bad for our generations...
The ones
that argue that it's safe, should provide room in their own home/land
and convince the public that live around there to join the gang of
martyrs. Don't push it on to the heads of poor, ignored and ignorant people...for rest of all you have fun..!!!
The nuclear plant is half-way through despite protests since it's
started. But it's still not too late.... we can convert it into a
hospital (JJ will be happy) and rebuild it in an unworthy land like the
great Indian desert or .... the parliament...
Need a smart
solution? Drop that NSA (aka: Non-Sense Act) crap. Prove that it's safe
to the international standards and get into an agreements that we, as in
WE, get power 24 * 7.
Legends are lights, not limits.
People
amused at an autodriver's claim that Gandhi's soul lives in him. I
don't understand why? I think his soul lives in most of Indians and that
is how he lives even after decades. It is just that one has to realize
it.
It triggers the opinion-optimus in me.
Not sure
if it's respect or ignorance, but often we make legends of major social
impacts unbelievable and unrepeatable or make them into gods. I believe
most of the Gods we have today were past legends of that kind. Such
legends are decreasing. It only shows human potential is growing weaker.
But think, legends are only the lights, not the limits to the goals.
7 Aum Arivu (7th Sense)
7
Aum Arivu (7th Sense) - an effort for revival of Tamil culture via the
story of Bodhi Dharman (Pallavar dynasty prince turned Buddhist monk
became a leader and guru in china). Good Movie. It could have been
better with subtle dialogues, better background score, authentic tunes
and poetic lyrics. However, I liked the movie.
Heard some laughs in theater when Shruthi Hassan rightfully argues on Tamil
and masterminding the plan to recreate Bodhi Dharman to protect India..
well .. come on citizens.. I am sure you wouldn't disagree with the
same concept in a Hollywood movie. The point is, it is possible to
recreate hereditary traits by reaching DNA via science or by teaching
history to conscience... Mariamman kovil thayaththu is nothing but a
similar trick for subconscious mind to (re)create the courage and
confidence used in past to defend and be hopeful...
Don't ever be afraid of feeling proud of what you are..!!!
Go ahead, feel it, try it... You could be a good competitor to our ancient heroes and a potential replacement...!
Quotes from Albert Einstein
"Any intelligent fool can make things bigger, more complex, and more violent. It takes a touch of genius -- and a lot of courage -- to move in the opposite direction."
"Imagination is more important than knowledge."
"Gravitation is not responsible for people falling in love."
"I want to know God's thoughts; the rest are details."
"The hardest thing in the world to understand is the income tax."
"Reality is merely an illusion, albeit a very persistent one."
"The only real valuable thing is intuition."
"A person starts to live when he can live outside himself."
"I am convinced that He (God) does not play dice."
"God is subtle but he is not malicious."
"Weakness of attitude becomes weakness of character."
"I never think of the future. It comes soon enough."
"The eternal mystery of the world is its comprehensibility."
"Sometimes one pays most for the things one gets for nothing."
"Science without religion is lame. Religion without science is blind."
"Anyone who has never made a mistake has never tried anything new."
"Great spirits have often encountered violent opposition from weak minds."
"Everything should be made as simple as possible, but not simpler."
"Common sense is the collection of prejudices acquired by age eighteen."
"Science is a wonderful thing if one does not have to earn one's living at it."
"The secret to creativity is knowing how to hide your sources."
"The only thing that interferes with my learning is my education."
"God does not care about our mathematical difficulties. He integrates empirically."
"The whole of science is nothing more than a refinement of everyday thinking."
"Technological progress is like an axe in the hands of a pathological criminal."
"Peace cannot be kept by force. It can only be achieved by understanding."
"The most incomprehensible thing about the world is that it is comprehensible."
"We can't solve problems by using the same kind of thinking we used when we created them."
"Education is what remains after one has forgotten everything he learned in school."
"The important thing is not to stop questioning. Curiosity has its own reason for existing."
"Do not worry about your difficulties in Mathematics. I can assure you mine are still greater."
"Equations are more important to me, because politics is for the present, but an equation is something for eternity."
"If A is a success in life, then A equals x plus y plus z. Work is x; y is play; and z is keeping your mouth shut."
"Two things are infinite: the universe and human stupidity; and I'm not sure about the the universe."
"As far as the laws of mathematics refer to reality, they are not certain, as far as they are certain, they do not refer to reality."
"Whoever undertakes to set himself up as a judge of Truth and Knowledge is shipwrecked by the laughter of the gods."
"I know not with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones."
"In order to form an immaculate member of a flock of sheep one must, above all, be a sheep."
"The fear of death is the most unjustified of all fears, for there's no risk of accident for someone who's dead."
"Too many of us look upon Americans as dollar chasers. This is a cruel libel, even if it is reiterated thoughtlessly by the Americans themselves."
"Heroism on command, senseless violence, and all the loathsome nonsense that goes by the name of patriotism -- how passionately I hate them!"
"No, this trick won't work...How on earth are you ever going to explain in terms of chemistry and physics so important a biological phenomenon as first love?"
"My religion consists of a humble admiration of the illimitable superior spirit who reveals himself in the slight details we are able to perceive with our frail and feeble mind."
"Yes, we have to divide up our time like that, between our politics and our equations. But to me our equations are far more important, for politics are only a matter of present concern. A mathematical equation stands forever."
"The release of atom power has changed everything except our way of thinking...the solution to this problem lies in the heart of mankind. If only I had known, I should have become a watchmaker."
"Great spirits have always found violent opposition from mediocrities. The latter cannot understand it when a man does not thoughtlessly submit to hereditary prejudices but honestly and courageously uses his intelligence."
"The most beautiful thing we can experience is the mysterious. It is the source of all true art and all science. He to whom this emotion is a stranger, who can no longer pause to wonder and stand rapt in awe, is as good as dead: his eyes are closed."
"A man's ethical behavior should be based effectually on sympathy, education, and social ties; no religious basis is necessary. Man would indeeded be in a poor way if he had to be restrained by fear of punishment and hope of reward after death."
"The further the spiritual evolution of mankind advances, the more certain it seems to me that the path to genuine religiosity does not lie through the fear of life, and the fear of death, and blind faith, but through striving after rational knowledge."
"Now he has departed from this strange world a little ahead of me. That means nothing. People like us, who believe in physics, know that the distinction between past, present, and future is only a stubbornly persistent illusion."
"You see, wire telegraph is a kind of a very, very long cat. You pull his tail in New York and his head is meowing in Los Angeles. Do you understand this? And radio operates exactly the same way: you send signals here, they receive them there. The only difference is that there is no cat."
"One had to cram all this stuff into one's mind for the examinations, whether one liked it or not. This coercion had such a deterring effect on me that, after I had passed the final examination, I found the consideration of any scientific problems distasteful to me for an entire year."
"...one of the strongest motives that lead men to art and science is escape from everyday life with its painful crudity and hopeless dreariness, from the fetters of one's own ever-shifting desires. A finely tempered nature longs to escape from the personal life into the world of objective perception and thought."
"He who joyfully marches to music rank and file, has already earned my contempt. He has been given a large brain by mistake, since for him the spinal cord would surely suffice. This disgrace to civilization should be done away with at once. Heroism at command, how violently I hate all this, how despicable and ignoble war is; I would rather be torn to shreds than be a part of so base an action. It is my conviction that killing under the cloak of war is nothing but an act of murder."
"A human being is a part of a whole, called by us _universe_, a part limited in time and space. He experiences himself, his thoughts and feelings as something separated from the rest... a kind of optical delusion of his consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest to us. Our task must be to free ourselves from this prison by widening our circle of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty."
"Not everything that counts can be counted, and not everything that can be counted counts."